மேலும் அறிய

திருவாரூர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊழியர்கள் போராட்டம் - முன்கள பணியாளர்களாக சேர்க்க கோரிக்கை

’’பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊக்க தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை’’

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கிராம ஊராட்சியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்கள் எந்த பெயரில் வைக்கப்பட்டிருந்தாலும் ஊதியம் வழங்கிய வங்கி கணக்கு ஆவணத்தை அடிப்படையாக கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணி நிரந்தர படுத்தப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுறுத்தினர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா பெருந்தொற்று தொடர்புடைய பணியில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

திருவாரூர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊழியர்கள் போராட்டம் - முன்கள பணியாளர்களாக சேர்க்க கோரிக்கை
1992 முதல் பணியமர்த்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரின் தொகுப்பூதியம் ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு 2013 முன்பு மற்றும் பின்பு பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் அரசு விதிகளை பின்பற்றி மாதாந்த சம்பளத்தை முறையாக கணக்கிட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் உத்தரவுப்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி ஓய்வுக்கான மாதம் ஓய்வு ஊதியம் 2000 மற்றும் சிறப்பு தொகை 50 ஆயிரம் உடனடியாக வழங்கிட வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி அடையாள அட்டை வழங்க வேண்டும்.
 
கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுநேர பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பென்ஷன் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை காவலர்கள் அனைவரும் அன்னக்கூடை, கூட்டுமார், கையுறை, காலனிகள் ஆகியவை அவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 1992ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகையை கணக்கிட்டு உடன் வழங்கிட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 3600 காலதாமதம் படுத்தப்படாமல் மாதந்தோறும் ஐந்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்

திருவாரூர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊழியர்கள் போராட்டம் - முன்கள பணியாளர்களாக சேர்க்க கோரிக்கை
முன் களப்பணியாளர்கள் பட்டியலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குபவர்களையும் இணைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் பிஎப் ஈஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பதிவேடு செயல்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
 
 

தலைப்பு செய்திகள்

ஏமாந்திடாதீங்க... என் பெயரில் போலி செல்போன் அழைப்புகள்: தஞ்சை ஆட்சியர் ரேவதி எச்சரிக்கை
ஏமாந்திடாதீங்க... என் பெயரில் போலி செல்போன் அழைப்புகள்: தஞ்சை ஆட்சியர் ரேவதி எச்சரிக்கை
எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை
எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget