மேலும் அறிய

திருத்துறைப்பூண்டி அருகே அரசு நடத்துனர் மீது தாக்கிய விவகாரம்: மேலும் 2 கல்லூரி மாணவர்கள்  கைது

மாணவர்கள் மணிகண்டன் மற்றும் பிரியதரன் இருவரையும் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இதுவரை இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தில் ஆபாசமாக பேசிகொண்டும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டும் வந்த மாணவர்களை தட்டிகேட்ட அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்கிய விவகாரத்தில் மேலும் இரண்டு அரசு கல்லூரி மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்.
 
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகி அடிதடி தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மாணவர்களிடையே மோதல், பேருந்தில் பயணிக்கும் பொழுது படியில் நின்று கொண்டு பிரச்சனையில் ஈடுபடுதல் அதனை கேட்கும் நபர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுதல், சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் இதே போன்று பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த பின்னரும் மாணவர்கள் இதே போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் இருந்த போது அதனை தட்டிக் கேட்ட அரசு பேருந்து நடத்துனர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து நடத்துனர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருத்துறைப்பூண்டி அருகே அரசு நடத்துனர் மீது தாக்கிய விவகாரம்: மேலும் 2 கல்லூரி மாணவர்கள்  கைது
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு அரசு பேருந்தை ஓட்டுனர் மகேந்திரன் என்பவர் நேற்று முன்தினம் மாலை இயக்கி வந்துள்ளார். புதிய பேருந்துநிலையத்தில் ஏறிய தண்டலச்சேரி அரசு உறுப்பு கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் பண்ணிகொண்டும் ஆபாசமாக பேசிகொண்டும் வந்துள்ளனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்நிலையில் தண்டலைச்சேரி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் உள்ளே இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தகாத வார்த்தையால் சத்தம் போட்டு வந்துள்ளனர். இதனை பேருந்து நடத்துனர் பக்கிரிசாமி (51) இதனை  கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து நடத்துனரை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து நடத்துனர் பக்கிரிசாமி மண்டை உடைந்தது. இதில் அவர் அங்கேயே மயங்கினார். உடனடியாக அருகில் இருந்த சக பயணிகள் நடத்துனரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

திருத்துறைப்பூண்டி அருகே அரசு நடத்துனர் மீது தாக்கிய விவகாரம்: மேலும் 2 கல்லூரி மாணவர்கள்  கைது
 
இந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய தண்டலைச்சேரி பாரதிதாசன் அரசு உறுப்பு கலை கல்லூரியைச் சேர்ந்த பி ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் பிஏ தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் முருகதாஸ் ஆகிய இருவரையும் நேற்று திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மணிகண்டன் மற்றும் பிரியதரன் இருவரையும் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் இதுவரை இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த பயணிகள் கூறுகையில், மதுபோதையில் மாணவர்கள் மிக ஒழுங்கின செயலில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது தகாத வார்த்தைகளால் பேசிக் கொள்ளுதலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு பெண்கள் மீது விழுந்ததும் நாகரிகமற்ற செயலாக கருதப்படுகிறது என்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Breaking News LIVE: பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Amitshah on VK Pandian :  ”ஒடிசாவை தமிழர் ஆளலாமா? மோடி பாணியில் அமித்ஷா! VK பாண்டியனுக்கு ஸ்கெட்ச்Congress Master Plan  : இன்னும் 35 சீட் தான் பாஜகவின் அஸ்திவாரம் காலி காங்கிரஸின் ரகசிய ரிப்போர்ட்Palanivel Thiyagarajan  : PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்?Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Breaking News LIVE: பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
Amit Shah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!
காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!
காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!
USA vs BAN: முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
TN Rain Alert: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Embed widget