மேலும் அறிய

திருவாரூரில் தொடர் கனமழை - 40,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!

’’ஏக்கர் ஒன்றுக்கு 20,000 முதல் 25,000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் சம்பா பயிர்கள் அழுகக்கூடிய நிலை உருவாகி உள்ளது’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது 30 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் 1 அடி தூரம் வளர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் தொடர் கனமழை - 40,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
திருவாரூர், ஓடாச்சேரி, கொரடாச்சேரி, நன்னிலம், ஆண்டிபந்தல், கச்சனம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழை நீரை வடிய வைத்து அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி பாதிப்படைந்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த மழை பெய்தால் சம்பா பயிர்கள் முழுவதுமாக அழுக கூடிய நிலை உருவாகும். இதுவரை ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பை விவசாயிகளால் தாங்க முடியாத நிலை உருவாகும், ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூரில் தொடர் கனமழை - 40,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
 
தற்பொழுது வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைத்தவுடன் உடனடியாக உரம் கொடுக்க வேண்டும், ஆகையால் தமிழ்நாடு அரசு அனைத்து வேளாண் கிடங்குகளிலும் தட்டுப்பாடின்றி உரம் யூரியா உள்ளிட்ட இடு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றனர், ஆகையால் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். முழுவதுமாக பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை வேளாண்மைத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் எந்தெந்த இடங்களில் ஆற்றின் கரை பலவீனமாக உள்ளதோ அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Embed widget