மேலும் அறிய

முகாந்திரம் இல்லாமல் பணியிடை நீக்கம்; களங்கத்தை துடைக்க போராடும் ஆசிரியரின் மனைவி

முகாந்திரம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலம். களங்கத்தை துடைக்க போராடும் ஆசிரியரின் மனைவி.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண்டு முதல் பணிபுரிந்து வருபவர் கார்த்திகை சாமி. இவருக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இந்த பள்ளியில் அவர் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்  அடிப்படையில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் இவரை கடந்த 30.07.2022 அன்று பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
 
இந்த பணியிடை நீக்கம்  செய்வதற்கான காரணங்களாக நான்கு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஆணை குப்பத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவரது கடிதம் தலைமை ஆசிரியர் கடிதம் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து கொடுத்த கடிதம் மாவட்ட குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள  தெரிவித்ததின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து கார்த்திகை சாமி இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது மாவட்ட குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற் கோ அல்லது நன்னிலம் காவல் நிலையத்திற்கோ எந்தவித கடிதமும் அனுப்பப்படவில்லை என்று பதில் வந்துள்ளது.
 
அதேபோன்று வீரபாண்டியன் என்பவர் ஆணைக்குப்பம் என்கிற ஊராட்சியில் வசிக்கவில்லை  என்று ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த கடிதம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தனக்கு எதிராக வந்துள்ள புகார்களின் நகல்களை கொடுக்குமாறு கேட்டதற்கு விசாரணை சென்று கொண்டிருப்பதால் நகல்களை அளிக்க முடியாது என்று வந்த பதில் போன்றவற்றின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  கார்த்திகை சாமி புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகார் மனுவில் என் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பி எனக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி  தற்கொலைக்கு தூண்டும் வகையிலும் அவதூறு பரப்பும் தலைமை ஆசிரியர் குலசேகரன், ஆசிரியர்கள் சக்தி ராஜசேகர், உமா மகேஸ்வரி, சக்திவேல் மற்றும் பணியிடை நீக்கம் செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் செய்தி இதழ்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதி வரும் நிருபர்களான பாலமுருகன் மற்றும் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கார்த்திகை சாமி குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தநிலையில் எட்டு மாத காலம் பணியிடை நீக்கத்தில் இருந்த கார்த்திகை சாமி தற்போது திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இருப்பிணும் தவறே செய்யாமல் தன்னை பணியிடை நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் மீண்டும் அதே பள்ளியில் தன்னை பணியமர்த்த வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அவர் புகார் மனுக்களை அனுப்பி வருகிறார்.மேலும் தன் மீது அவதூறு பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி யிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குலசேகரன் இந்த பிரச்சனை காரணமாக விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாலமுருகன் என்பவர் செய்தியை வெளியிடாமல் இருப்பதற்கு 4 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஆசிரியர் கார்த்திகை சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆசிரியர் கார்த்திகைசாமியின் மனைவி சகாயமேரி கூறுகையில் எனது கணவர் மீது அவதூறு பரப்பு வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோன்று பணம் கேட்டு மிரட்டியவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்த எனது கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ONE NATION ONE ELECTION : ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல்... நோயை விட மோசமான மருந்து- பாஜக அரசுக்கு எதிராக இறங்கி அடித்த ஸ்டாலின்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
Embed widget