மேலும் அறிய

முகாந்திரம் இல்லாமல் பணியிடை நீக்கம்; களங்கத்தை துடைக்க போராடும் ஆசிரியரின் மனைவி

முகாந்திரம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலம். களங்கத்தை துடைக்க போராடும் ஆசிரியரின் மனைவி.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண்டு முதல் பணிபுரிந்து வருபவர் கார்த்திகை சாமி. இவருக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இந்த பள்ளியில் அவர் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்  அடிப்படையில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் இவரை கடந்த 30.07.2022 அன்று பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
 
இந்த பணியிடை நீக்கம்  செய்வதற்கான காரணங்களாக நான்கு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஆணை குப்பத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவரது கடிதம் தலைமை ஆசிரியர் கடிதம் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து கொடுத்த கடிதம் மாவட்ட குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள  தெரிவித்ததின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து கார்த்திகை சாமி இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது மாவட்ட குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற் கோ அல்லது நன்னிலம் காவல் நிலையத்திற்கோ எந்தவித கடிதமும் அனுப்பப்படவில்லை என்று பதில் வந்துள்ளது.
 
அதேபோன்று வீரபாண்டியன் என்பவர் ஆணைக்குப்பம் என்கிற ஊராட்சியில் வசிக்கவில்லை  என்று ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த கடிதம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தனக்கு எதிராக வந்துள்ள புகார்களின் நகல்களை கொடுக்குமாறு கேட்டதற்கு விசாரணை சென்று கொண்டிருப்பதால் நகல்களை அளிக்க முடியாது என்று வந்த பதில் போன்றவற்றின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  கார்த்திகை சாமி புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகார் மனுவில் என் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பி எனக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி  தற்கொலைக்கு தூண்டும் வகையிலும் அவதூறு பரப்பும் தலைமை ஆசிரியர் குலசேகரன், ஆசிரியர்கள் சக்தி ராஜசேகர், உமா மகேஸ்வரி, சக்திவேல் மற்றும் பணியிடை நீக்கம் செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் செய்தி இதழ்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதி வரும் நிருபர்களான பாலமுருகன் மற்றும் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கார்த்திகை சாமி குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தநிலையில் எட்டு மாத காலம் பணியிடை நீக்கத்தில் இருந்த கார்த்திகை சாமி தற்போது திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இருப்பிணும் தவறே செய்யாமல் தன்னை பணியிடை நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் மீண்டும் அதே பள்ளியில் தன்னை பணியமர்த்த வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அவர் புகார் மனுக்களை அனுப்பி வருகிறார்.மேலும் தன் மீது அவதூறு பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி யிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குலசேகரன் இந்த பிரச்சனை காரணமாக விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாலமுருகன் என்பவர் செய்தியை வெளியிடாமல் இருப்பதற்கு 4 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஆசிரியர் கார்த்திகை சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆசிரியர் கார்த்திகைசாமியின் மனைவி சகாயமேரி கூறுகையில் எனது கணவர் மீது அவதூறு பரப்பு வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோன்று பணம் கேட்டு மிரட்டியவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்த எனது கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
Embed widget