மேலும் அறிய

திருவாரூர்: ஒரு பக்கம் லஞ்சம்.. மொத்தமாக நெல் கொள்முதல்.. நெல் கொள்முதல் நிலையங்களில் 25 பேர் சஸ்பெண்ட்!

பணம் பெற்றுக் கொண்டு நெல் கொள்முதல் செய்தல், மொத்தமாக நெல் கொள்முதல் செய்தல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 25 நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற் பயிர்கள் பயிரிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து அறுவடை பணிகள் என்பது நடைபெற்று நெற்பயிர்களை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 505 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெற்பயிர்களை அரசு கொள்முதல் செய்தது. இந்த அரசின் நிரந்தர மற்றும் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வரை  5 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இது சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.காரைப் பருவம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் உள்ள 505 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது 143 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்படுகிறது.மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் கொள்முதல் செய்தல், மொத்தமாக நெல் கொள்முதல் செய்தல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 25 நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக  முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: ஒரு பக்கம் லஞ்சம்.. மொத்தமாக நெல் கொள்முதல்.. நெல் கொள்முதல் நிலையங்களில் 25 பேர் சஸ்பெண்ட்!
மேலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு பணம் பெறுவதாக தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து புகார் வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜராஜன் தெரிவித்தார். தற்போது சம்பா தாளடி அறுவடை பணிகள் என்பது பெருமளவு முடிவடைந்து சம்பா நெற்பயிர்கள் மட்டும் 5 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 7 லட்சத்து 12 ஆயிரத்து 279 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காரை பருவம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால்  இந்த அளவானது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருவாரூர்: ஒரு பக்கம் லஞ்சம்.. மொத்தமாக நெல் கொள்முதல்.. நெல் கொள்முதல் நிலையங்களில் 25 பேர் சஸ்பெண்ட்!
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் அல்லது லஞ்சம் பெறுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக  இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த வருடம் இது போன்ற ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த பின்னர் தங்களது நெற்பயிர்களை விற்பனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
 
இருப்பினும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்ற விவசாயிகளும் பணம் பெறும் நிகழ்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடி வரக் கூடிய சூழ்நிலையில் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தில் இருந்து லஞ்சம் பெறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,இது போன்று மீண்டும் நடைபெறா வண்ணம் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
TVK Vijay: திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Embed widget