மேலும் அறிய

பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரதம்

ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது. இந்த நிலையில் மார்ச் 31 அன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 



பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரதம்

மேலும் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களில் சரியான எண்ணிக்கை பெறப்பட்டு விரைவாக பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.துறை சார்ந்த அறிவு பெற்ற டெக்னீஷியன்கள் மட்டுமே அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப அவர்களின் வாழ்வாதாரம் என்பது மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.


பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரதம்

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு செவிலியர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்றுக்கொண்ட செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பாக இசிஜி தொழில்நுட்பனர்கள் இந்த பணியில் சேர்ந்து திறம்பட பணிபுரிந்தனர். குடும்பத்தையும் கவனிக்காமல், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கருணை அடிப்படையில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

 

தலைப்பு செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget