மேலும் அறிய

பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரதம்

ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது. இந்த நிலையில் மார்ச் 31 அன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 



பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரதம்

மேலும் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களில் சரியான எண்ணிக்கை பெறப்பட்டு விரைவாக பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.துறை சார்ந்த அறிவு பெற்ற டெக்னீஷியன்கள் மட்டுமே அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப அவர்களின் வாழ்வாதாரம் என்பது மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.


பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரதம்

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு செவிலியர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்றுக்கொண்ட செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பாக இசிஜி தொழில்நுட்பனர்கள் இந்த பணியில் சேர்ந்து திறம்பட பணிபுரிந்தனர். குடும்பத்தையும் கவனிக்காமல், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கருணை அடிப்படையில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி
மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ரூல்ஸ் மீறிட்டிங்க, குவிந்த பிணங்கள்..! ஹார்மஸை உடனடியாக மூடிய ஈரான் - அமெரிக்கா ஷாக், இஸ்ரேல் சூது
US Iran War: ரூல்ஸ் மீறிட்டிங்க, குவிந்த பிணங்கள்..! ஹார்மஸை உடனடியாக மூடிய ஈரான் - அமெரிக்கா ஷாக், இஸ்ரேல் சூது
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
Assembly Elections 2026: மாற்றம் நிகழுமா? - அசாம், கேரளா, புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு!
Assembly Elections 2026: மாற்றம் நிகழுமா? - அசாம், கேரளா, புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு!
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
Embed widget