மேலும் அறிய

Thiruvarur : ”வீச்சு அரிவாளை கொண்டு மிரட்டல் – மதுபோதையில் ரகளை’ அதிரடி காட்டிய திருவாரூர் மாவட்ட போலீஸ்..!

"திருவாரூர் மாவட்டாத்தில் மக்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் வேறு எந்த பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட பிறகு தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுத்து வருகிறது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு சிக்கல்

குறிப்பாக, சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் பிரிவு உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளுக்கே அன்றாடம் சென்று அவர்களை கண்காணிப்பதும் சட்டவிரோதா செயல்களில் அவர்களு ஏதும் ஈடுபடுகின்றனரா என்பதை ஆய்வு செய்வதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கையை மாவட்ட எஸ்.பிக்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

கேட்டகரிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ரவுடிகள் - கண்காணிப்பு வளையத்தில் சரித்திர குற்றவாளிகள்

ஏ,பி.சி. என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து எஸ்.பிக்கு ரிப்போர்ட் அனுப்ப காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளும் சந்தேகத்திற்கு உட்பட்டோரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சிக்கும் ரவுடிகள்

இந்நிலையில்,  திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தலின்படி ரவுடிகள் நடமாட்டம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீச்சு அரிவாளை காட்டி மிரட்டல் - கம்பி எண்ணப்போகும் சண்டியர்கள்

இந்த நிலையில் கொரடாச்சேரி கூத்தாநல்லூர் மற்றும் திருவாரூர் நகர காவல் நிலைய பகுதிகளில் மது போதையில் வீச்சு அறிவாள்களோடு பொதுமக்களிடம் பிரச்சனையில் ஈடுபட்ட கொரடாச்சேரி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பிரசாத் வயது 24, நந்தகுமார் வயது 22 மேலும் கூத்தாநல்லூர் காவல் சரக பகுதியில் அருள் வயது 23 மற்றும் திருவாரூர் நகர காவல் கரகத்தில் உள்ள சஞ்சய் வயது 23 ஆகியோர் வீச்சு அறிவாளை வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் மற்றும் பொதுமக்களை அச்சமடைய செய்தல் ஆகிய குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து வீச்சு அறிவாள்களோடு இருந்த நான்கு பேரையும் போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் புகார் அளிக்கலாம்

பொதுமக்களை அச்சுறுத்துவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடனும் நடந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு, திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி காட்டியுள்ளார். பொதுமக்கள் எந்த வித தயக்கமும் அச்சமும் இல்லாமல் தங்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பவர்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூர் மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Embed widget