மேலும் அறிய

மிக்ஜாம் பேரிடர் : சென்னைக்கு நிவாரண பொருட்கள்.. லாரிகளை கொடியசைத்து வழியனுப்பிய ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் இரண்டு லாரி மூலம் திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னைக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகளை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தார்
 
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்த காரணத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நிவாரண பொருட்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், பேரளம் குடவாசல், நீடாமங்கலம், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, வலங்கைமான் ஆகிய ஏழு பேரூராட்சிகள் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சி மற்றும் திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றின் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் என இரண்டு லாரி மூலம் திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மிக்ஜாம் பேரிடர் : சென்னைக்கு நிவாரண பொருட்கள்.. லாரிகளை கொடியசைத்து வழியனுப்பிய ஆட்சியர்
 
குறிப்பாக அரிசி, பிஸ்கட், வாட்டர் பாட்டில், பிரெட் தலையணை பாய் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.குறிப்பாக 20,000 லிட்டர் வாட்டர் பாட்டில்கள் குறிப்பாக இந்த நிவாரண பொருட்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் அடங்கிய இந்த லாரியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிக்ஜாம் பேரிடர் : சென்னைக்கு நிவாரண பொருட்கள்.. லாரிகளை கொடியசைத்து வழியனுப்பிய ஆட்சியர்
 
இதேபோன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி கலைவாணன் தனது சொந்த நிதி 10 லட்சம் மதிப்பில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மூன்று லாரிகள் மூலமாக அனுப்பி வைத்தார் அரிசி காய்கறி உள்ளிட்ட பொருள்களை 3000 பைகள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
இதேபோன்று கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை சென்னைக்கு கொண்டு சென்று அமைச்சர் டி ஆர் பி ராஜா மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். இதேபோன்று பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Embed widget