மேலும் அறிய

திருவாரூர்: கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக  சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும்  மழை நீரில் மூழ்கி வருகிறது

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மாவட்டம் முழுவதும் 24 மணிநேரத்தில் 504 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது
 
திருவாரூர் தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மேலும் திருச்செந்தூர் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

திருவாரூர்: கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..
இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என நேற்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் முழுவதும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார் ஆகையால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேலும் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருவதால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர்: கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக  சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும்  மழை நீரில் மூழ்கி வருகிறது ஆகையால் மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் வேளாண் துறை பொதுப்பணித் துறை ஊழியர்களை கொண்டு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 103.3 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது நன்னிலத்தில் 94.2 மில்லி மீட்டரும் குடவாசலில் 37.6 மில்லி மீட்டரும் மன்னார்குடியில் 48.6 மில்லி மீட்டரும் திருத்துறைப்பூண்டியில் 46.1 மில்லி மீட்டரும் முத்துப்பேட்டையில் 49.6 மில்லி மீட்டரும் பாண்டவையாற்றில் 59.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Embed widget