மேலும் அறிய

காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக விதிக்கப்பட்ட இழப்பீடுத் தொகை 1 லட்சம், வழக்கு செலவு தொகையாகு 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.

இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ரூ.19 லட்சத்து 47 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் எடையூர் புதுத்தெருவைச் சேர்ந்த 53 வயதான ஜெயக்குமார் என்பவர் எடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளார். இதற்கு முதல் வருடத்திற்கான பிரிமீயம் தொகையான 1,09,104 ரூபாய் ஜிஎஸ்டியுடன் சேர்த்து  செலுத்தியுள்ளார். இந்த காப்பீட்டின் முதிர்வு தேதி 25/3/2036 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேன்மொழி திருத்துறைப்பூண்டி ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது கணவர் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகையான 18 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் தனக்கு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார்.


காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதற்கு ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஜெயக்குமாருக்கு ஏற்கனவே உடல் உபாதை இருந்து அதற்கான சிகிச்சை பெற்றுள்ளதாக கூறி காப்பீடு தொகையை வழங்க மறுத்துள்ளது. இதனையடுத்து தேன்மொழி இது குறித்து உரிய ஆண்களுடன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இறப்பிற்கான இன்சூரன்ஸ் தொகை மற்றும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி சேவை குறைபாடு செய்வதற்காக ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கடந்த 07.04.2022ல் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு ஜெயக்குமாருக்கு ஏற்கனவே உடல் பாதைகள் இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் நகல் ஆவணமாக இருப்பதாலும், மேலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை எனவும் தெரிவித்ததுடன் தேன்மொழிக்கு ஜெயக்குமார் இறப்பிற்கான இழப்பீடு தொகையான 18 லட்சத்து 37,500 ரூபாயை ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் தேன்மொழியின் விண்ணப்பத்தை நிராகரித்த தேதியான  29.12.2021 ல்  இருந்து பணம் செலுத்தும் வரை 12 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும்  எனவும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் ஆக மொத்தம் 19 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ஒரு மாத காலத்திற்கு வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.


காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக விதிக்கப்பட்ட இழப்பீடுத் தொகை ஒரு லட்ச ரூபாய் மற்றும் வழக்கு செலவு தொகையாகு 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறும் பட்சத்தில் பணம் வழங்கும் தேதி வரை 6% வருட  வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget