மேலும் அறிய

திருவாரூரில் மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது

மூதாட்டியின் மகன் செந்தில்குமார் நண்பர் வினோத் வயது 35 என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் கடி மருத்துகாரத் தெருவில் வசிக்கும் 60 வயது மூதாட்டி மலர்க்கொடி. இவர் தனது வீட்டின் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகன் செந்தில்குமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல் வீட்டில் வசித்து வருகிறார். செந்தில்குமார் வீட்டிற்கு அருகிலேயே வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில்  விடியற்காலையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரும்பு ராடால் மலர்க் கொடியை கடுமையாக தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த  இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். மலர்கொடியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் செந்தில்குமார் மேல் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபோது தலையில் இரும்பு ராடு தாக்கியதில் பலத்த காயமடைந்து மலர்கொடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


திருவாரூரில் மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது

இந்த நிலையில் மூதாட்டியை தாக்கி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் நன்னிலம் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வாளர் சுகுணா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் மூதாட்டியின் மகன் செந்தில்குமார் நண்பர் குடவாசல் பகுதியைச் சேர்ந்த வினோத் (35) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கச்சங்கிலியை பறிப்பதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூரில் மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கணவனை இரும்பு ராடால் தாக்கி மனைவியிடமிருந்து 12 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்யபட்டிருந்த நிலையில் அந்த சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் தற்போது மீண்டும் மூதாட்டியை தாக்கி தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இரவு நேர ரோந்து வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும் மேலும் கிராமப்புறங்களில் அதிக அளவில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டால் இதே போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க முடியலாம் என பொதுமக்கள் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget