திருவையாறு, தஞ்சாவூர் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்த துரை.சுதாகர்
திருவையாறு கடைவீதியில் வேட்பாளர் துரை. சந்திர சேகரனுக்கு ஆதரவு தெரிவித்து திமுக வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர், நடிகர் துரை.சுதாகர் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இறங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து திருவையாறு கடைவீதியில் திரைப்பட நடிகரும், தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளருமான துரை.சுதாகர் வாக்குகள் சேகரித்தார்
திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக துரை.சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில் மும்முரம் அடைந்துள்ளனர். அந்தவகையில் திருவையாறு கடைவீதியில் வேட்பாளர் துரை. சந்திர சேகரனுக்கு ஆதரவு தெரிவித்து திமுக வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர், நடிகர் துரை.சுதாகர் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இறங்கினார்.

திருவையாறு கடைவீதியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டும், தமிழக அரசின் 5 ஆண்டுகாலத்தில் கல்வி, சுகாதாரம், மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. குறிப்பாக, மகளிர் இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் 11.19% வளர்ச்சி போன்ற திட்டங்கள் மூலம் முந்தைய ஆட்சியை விட சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, மக்களை தேடி மருத்துவம், கோயில்கள் திருப்பணி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று சாதனைகளை விளக்கி துரை. சுதாகர் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது திருவையாறு பேரூர் செயலாளர் நாகராஜன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் கண்ணன், நற்பணி மாவட்ட அமைப்பாளர் தரும.சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தஞ்சை சட்டமன்ற வேட்பாளர் ண்.ராமநாதனுக்கு பள்ளியக்கிஹாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் தஞ்சாவூர் கடை வீதியில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தஞ்சை தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தரும. சரவணன், எம். எஸ். கண்ணன், கமல்முருகேசன், பூக்குளம் முருகன்,வக்கீல்மணிமாறன், கார்த்தி, வல்லம் ரெங்கேஸ்வரன், ரேணுகா, பூதலூர் மாரிமுத்து, கரீம்பாய், திமுக மாமன்ற உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.























