மேலும் அறிய

மழை நின்றது... சாகுபடி பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரம்

சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தாலும் கனமழை இல்லை. இதனால் விவசாயிகள் களைப்பறித்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளில் இறங்கி உள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்விராயன்பேட்டை பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டித்வா புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீரில் இளம் சம்பா, தளாடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர். இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, 8 நம்பர் கரம்பை, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் இந்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்தது. ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் முன்கூட்டியே நடவுப்பணிகள் நிறைவடைந்ததால் பயிர்கள் வளர்ச்சிக்கு இந்த மழை உதவியதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தற்போது இப்பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தாலும் கனமழை இல்லை. இதனால் விவசாயிகள் களைப்பறித்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்ததால் வயல்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், வளர்ந்து வரும் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் வகையிலும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை பகுதியில் வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் பணிகளில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் பாதிக்கப்படும் என்பதால் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை ஈடுபட்டுள்ளோம். மாலை வேளையில் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடாது என்பதால் மதியத்திற்குள் முடிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறோம். மேலும் பயிர்கள் நன்கு செழித்து வளர பல பகுதிகளில் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget