மேலும் அறிய

இந்திய கம்யூ. சார்பில் தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய  அரசுக்கு அனுப்பிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடந்த  23ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி,  மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது, மின்சார சட்டத் திருத்த மசோதா, சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தை திரும்பப் பெறுவது, கருத்துச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்துவது, கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய  அரசுக்கு அனுப்பிட, கட்சி தலைமை  அறிவிக்கப்பட்டதையொட்டி  இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி, மூன்று ரோடு சந்திப்பில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது. 

இந்திய கம்யூ. சார்பில்  தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தவத்திரு விசிறி சாமியார் முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மக்கள் பாராளுமன்றத்தின் சபாநாயகராக வங்கி ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்த்  தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.  வேளாண்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் வேளாண் சட்ட முன்வடிவை முன்மொழிந்து உரையாற்றினார். வேளாண் துறை இணையமைச்சர் பீர்முகமது சட்ட முன்வடிவை  வழிமொழிந்து பேசினார்.

மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் இந்த  சட்டங்களின் பாதிப்புகளை ஆதாரத்துடன் விளக்கி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றத்தில் பேசினார். அதனை தொடர்ந்து திமுக விவசாய சங்க பிரிவு செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜீவகுமார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராமநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, தொழிற்சங்க தலைவர் வெ.சேவையா ஆகிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார்கள்.

இந்திய கம்யூ. சார்பில்  தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி சட்டத்தை திரும்பப் பெற  வலியுறுத்தி தீர்மானங்களை முன்மொழிந்து     விளக்கி பேசினார். மூன்று வேளாண் சட்டங்களையும், புதிய மின்சார சட்டத்தையும் திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மான நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார் , மாவட்ட குழு உறுப்பினர் முத்துக் குமரன், ஒன்றிய பொறுப்பு செயலாளர் ராமலிங்கம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் , மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இறுதியாக தேசிய கீதம் இசைக்க மக்கள் நாடாளுமன்ற நிறைவுபெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget