மேலும் அறிய

இந்திய கம்யூ. சார்பில் தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய  அரசுக்கு அனுப்பிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடந்த  23ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி,  மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது, மின்சார சட்டத் திருத்த மசோதா, சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தை திரும்பப் பெறுவது, கருத்துச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்துவது, கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தி, அதன் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய  அரசுக்கு அனுப்பிட, கட்சி தலைமை  அறிவிக்கப்பட்டதையொட்டி  இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி, மூன்று ரோடு சந்திப்பில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது. 

இந்திய கம்யூ. சார்பில் தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தவத்திரு விசிறி சாமியார் முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மக்கள் பாராளுமன்றத்தின் சபாநாயகராக வங்கி ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்த்  தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.  வேளாண்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் வேளாண் சட்ட முன்வடிவை முன்மொழிந்து உரையாற்றினார். வேளாண் துறை இணையமைச்சர் பீர்முகமது சட்ட முன்வடிவை  வழிமொழிந்து பேசினார்.

மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் இந்த  சட்டங்களின் பாதிப்புகளை ஆதாரத்துடன் விளக்கி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றத்தில் பேசினார். அதனை தொடர்ந்து திமுக விவசாய சங்க பிரிவு செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜீவகுமார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராமநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, தொழிற்சங்க தலைவர் வெ.சேவையா ஆகிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார்கள்.

இந்திய கம்யூ. சார்பில் தஞ்சையில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் -வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்...!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி சட்டத்தை திரும்பப் பெற  வலியுறுத்தி தீர்மானங்களை முன்மொழிந்து     விளக்கி பேசினார். மூன்று வேளாண் சட்டங்களையும், புதிய மின்சார சட்டத்தையும் திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மான நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார் , மாவட்ட குழு உறுப்பினர் முத்துக் குமரன், ஒன்றிய பொறுப்பு செயலாளர் ராமலிங்கம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் , மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இறுதியாக தேசிய கீதம் இசைக்க மக்கள் நாடாளுமன்ற நிறைவுபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget