மேலும் அறிய

’கஜா புயலுக்கு செலவழித்த 1.60 கோடியை அரசு திருப்பி தரவில்லை’- பேராவூரணி ஒன்றிய கவுன்சிலர் வேதனை

’’கஜா புயலுக்கு ஒன்றியத்திலிருந்து பொது நிதியை செலவழித்த வகையில், அரசிடமிருந்து 59 லட்சம் மட்டுமே வந்துள்ளது. 1.60 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை’’

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், ஆவணம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில்  நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவடிவேல் வரவேற்றார். திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,  ஒன்றியக்குழு கூட்டம் நடைபெறும் போது அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வதில்லை. அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டங்களில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தர, வந்திருக்கும், பெரும்பாலான அரசு அதிகாரிகள் முன் வருவதில்லை.  ஒன்றிய கூட்டங்களை புறக்கணிக்கின்றார்களா என்று தெரிய வில்லை. இந்தப்போக்கு ஏற்கத்தக்கதல்ல என்றார்.


’கஜா புயலுக்கு செலவழித்த 1.60 கோடியை அரசு திருப்பி தரவில்லை’- பேராவூரணி ஒன்றிய கவுன்சிலர் வேதனை

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குணாநிதி ஆல்பர்ட், பாக்கியம் முத்துவேல், ராஜலட்சுமி ராஜா, பெரியநாயகி ஆகியோர் பேசுகையில், சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், எம்-சாண்ட் பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் தரமற்றதாக இருப்பதால், அரசு கட்டிடப் பணிகளுக்கு, ஆற்று மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒட்டங்காடு பகுதியில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஒட்டங்காடு கடைவீதியில் சிசிடிவி வசதி செய்ய வேண்டும். வெறிநாய் தொந்தரவு இருப்பதால் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். வீடுகளுக்குள் மழை வெள்ளம் வருவதை தடுக்கும் விதமாக, வருமுன் காப்போம் என்ற வகையில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இறுதியாக அதிமுக ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் பேசுகையில்," பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக அரசுக்கு ஒன்றியக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியாத வகையில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. கஜா புயலுக்கு ஒன்றியத்திலிருந்து பொது நிதியை செலவழித்த வகையில், அரசிடமிருந்து 59 லட்சம் மட்டுமே வந்துள்ளது. 1.60 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. 6 ஆவது மாநில நிதிக்குழு இணையதள கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்திப் பேசினேன்.  இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.


’கஜா புயலுக்கு செலவழித்த 1.60 கோடியை அரசு திருப்பி தரவில்லை’- பேராவூரணி ஒன்றிய கவுன்சிலர் வேதனை

தற்போது பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் நலிவுற்ற ஊராட்சியாக இருக்கிறது. நலத்திட்டங்களை நிறைவேற்ற, இதனை நலிவுற்ற ஊராட்சியாக அறிவித்து, சிறப்பு நிதி ஒதுக்க மாவட்ட நிர்வாகம், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார். இறுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரியை தவிர மற்ற துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget