மேலும் அறிய

ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்

செல்போன் பேசியபடி வந்ததால் கடுப்பான மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்,  பொறியாளர் ஆனந்தியை முன்னால் வர சொல்லி அவரது செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கண்டித்தார். 

தஞ்சாவூர்: தஞ்சையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் செல்போன் பேசியபடி பெண் பொறியாளர் வந்தார். இதனால் கடுப்பான மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்,  பொறியாளர் ஆனந்தியை முன்னால் வர சொல்லி அவரது செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கண்டித்தார். 

டபீர்குளம் பகுதியில் ஆய்வுப்பணி

தஞ்சை டபீர்குளம் ரோடு வார்டு 11 பகுதியில் மாநகராட்சி பள்ளிகள் இருந்து அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் தண்ணீர் தொட்டி தூய்மையாக இருக்கின்றதா பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா மின் விளக்குகள், மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

செல்போன் பேசிக் கொண்டு இருந்ததால் கடுப்பானார்

ஆய்வின் போது அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை அதிகாரிகளிடம் சொல்லி அதனை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தபடியே வந்தார். அப்போது பொறியாளர் ஆனந்தி என்பவர் செல்போன் பேசிக் கொண்டே வந்தார். மேயர் சண்.ராமநாதன் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் பின்னால் அந்த பெண் பொறியாளரை திரும்பிப் பார்த்த மேயர் அவர் தொடர்ந்து செல்போன் பேசியபடியே இருந்ததால் கடுப்பானார். முன்னாடி வாங்கம்மா என்று அவரை அழைத்து அவரது செல்போனை பிடுங்கி ஆப் செய்து தனது பாக்கெட்டிற்குள் வைத்தார்.


ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்

அதிகாரிக்கு டோஸ் விட்டு செல்போனை பறித்தார்

மேலும் அந்த அதிகாரியை கூப்பிட்ட மேயர் பணியின் போது செல்போன் பேசக்கூடாது எனவும் பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைகளை குறிப்பெடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் அந்த வார்டில் என்னனென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று கேட்டு அறிந்தார். மேயர் சண்.ராமநாதனின் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

மக்கள் குறைகளை ஆய்வு செய்யும் போது கவனம் தேவை

சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடைப்பணிகள், குப்பைகள் சேகரிப்பு, குடிநீர் பிரச்சினை என்று அடிக்கடி வார்டுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்வது, மக்கள் கூறும் குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது என்று எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கூலாக ஹேண்டில் செய்து வருவார். ஆனால் இன்று பிரச்சினைகளை குறிப்பெடுங்கள் என்று அதிகாரியிடம் கூறியும் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததால் மேயர் சண்.ராமநாதன் கடுப்பாகி விட்டார்.

அதனால்தான் அந்த செல்போனை பிடுங்கி ஆப் செய்து தன்னிடமே வைத்துக் கொண்டு விட்டார். மக்கள் குறைகளை தீர்க்க ஆய்வு செய்யும் போது எதற்காக போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் எப்படி மக்கள் கூறும் குறைகளை சரி செய்ய முடியும் என்று நினைத்ததால்தான்  மேயர் இப்படி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் என்று மாநகராட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
TN Govt: அடடா..! ரூ.4000 உதவித்தொகை - அறிவித்தது தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
TN Govt: அடடா..! ரூ.4000 உதவித்தொகை - அறிவித்தது தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு
தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
Embed widget