மேலும் அறிய

மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்...பரபரப்பான தஞ்சை கலெக்டர் ஆபிஸ்..!

கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு பெண் தான் வைத்திருந்த பையில் இருந்து ஒரு கேனை எடுத்தார். அதில் மண்ணெண்ணை இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் இதை கவனித்து விட்டனர்.

தஞ்சை மாவட்ட போலீசாருக்கு திங்கட்கிழமை என்றாலே செம டென்ஷன்தான். காரணம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருபவர்களில் யாராவது ஒருவர் ஏடாகூடமாக எதையாவது செய்து அலப்பறையை கிளப்பி விடுகின்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அன்று முழுவதும் தலைவலிதான். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணை எடுத்து தன் மீது ஊற்றிக் கொள்ள ஒரு பெண் முயற்சி செய்தார். இதை பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் பார்த்துவிட்டு பதறி போய் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்து அந்த கேனை பறித்து முயற்சியை முறியடித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வழக்கம்போல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து மனு அளித்தனர்.

 


மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்...பரபரப்பான தஞ்சை கலெக்டர் ஆபிஸ்..!

அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென்று தான் வைத்திருந்த பையில் இருந்து ஒரு கேனை எடுத்தார். அதில் மண்ணெண்ணை இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் இதை கவனித்து விட்டனர். உடன் அந்த பெண்ணை சுற்றி வளைத்த பெண் போலீசார் சட்டென்று மண்ணெண்ணை இருந்த பாட்டிலை பறிக்க வந்தனர். அந்த பெண்ணும் விடாமல் இழுக்க முயற்சி செய்ய கடைசியில் போலீசார் ஒருவழியாக அந்த பாட்டிலை பறித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் தஞ்சை மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை ஆற்றங்கரைப்பட்டியை சேர்ந்த லதா (38) என்பது தெரியவந்தது. இவரது கணவர் செல்வராஜ் இறந்து விட்டார். இதனால் இவருக்கு கணவர் வீட்டார் சொத்து குறித்து பிரச்னை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் லதாவுக்கும், இவரது கணவரின் சகோதரர் சிவா, மற்றொரு சகோதரரின் மனைவி மற்றொரு லதா ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்னை குறித்து தகராறு எழுந்துள்ளது. இதில் செல்வராஜின் மனைவி லதா வீட்டிற்கு செல்ல வழிபாதை இல்லை என்று கூறப்படுகிறது.

 


மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்...பரபரப்பான தஞ்சை கலெக்டர் ஆபிஸ்..!

இதுகுறித்து மனு கொடுக்க வந்தவர் மனமுடைந்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் லதாவுக்கு அறிவுரைகள் வழங்கி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்து அனுப்பி வைத்து பெருமூச்சு விட்டனர். போலீசார் என்றாலே கடுமையானவர்கள் என்று நினைத்த பொதுமக்களுக்கு அவர்கள் படும்பாட்டை நேரில் பார்த்ததால் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Embed widget