மேலும் அறிய

குடுகுடுப்பைக்காரராக மாறி கொரோனா விழிப்புணர்வு; பார்வையற்ற மாணவரை பார்த்து திருந்திய மக்கள்..!

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் குடுகுடுப்பைக்காரரை போல் வேடமிட்டு மேற்கொண்ட கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் தஞ்சை பகுதி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஆங்காங்கே பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும்,  தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களிடம்  மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற அரக்கன் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து பொருளாதார இழப்பை மக்கள் சந்தித்தது போதும். இனிமேலும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் பொதுமக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இம்மானுவேல்  என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் குடுகுடுப்பைக்காரர் போல் வேடமணிந்து தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

குடுகுடுப்பைக்காரராக மாறி கொரோனா விழிப்புணர்வு; பார்வையற்ற மாணவரை பார்த்து திருந்திய மக்கள்..!

அந்த மாணவரின் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குடுகுடுப்பைக்காரர் எப்படி நடந்து கொள்வாரோ அதேபோல் அந்த மாணவன் செய்து காட்டி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் மாணவனை பாராட்டினர்.

மிகுந்த உற்சாகத்துடன் அந்த மாணவர் விழிப்புணர்வை ஏற்படுத்த மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கலந்து கொண்ட டவுன் டி.எஸ்.பி. (பொ) ராஜ்குமார், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் ஆகியோர் மாஸ்க் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பும், அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் ஒன்றையும் வழங்கினர். தொடர்ந்து, மாணவன் இமானுவேலையும் பாராட்டினர். மாஸ்க் அணியாமல் வந்த பொதுமக்கள் மாணவரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கண்டு அருகிலிருந்த கடைகளில் மாஸ்க் வாங்கி அணிந்ததையும் காண முடிந்தது.

இது குறித்து பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி தலைமையாசிரியை சோபியா கூறுகையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் என போலீசார் மாணவர்களைக் கேட்டனர். அதன்படி மூன்று மாணவர்களைத் தேர்வு செய்தோம். இதில் இமானுவேல் சிறப்பாக செயல்பட்டதால், அவர் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இது எங்கள் பள்ளிக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அந்த மாணவனின் செயலை பலரும் பாராட்டி விட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget