மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தேர்தலை புறக்கணிக்கிறோம்...கிராம மக்கள் அறிவிப்பால் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை
கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்பதால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
![தேர்தலை புறக்கணிக்கிறோம்...கிராம மக்கள் அறிவிப்பால் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை Thanjavur Villagers are against the move to merge with Tiruvaiyar municipality and upgrade it to a municipality - TNN தேர்தலை புறக்கணிக்கிறோம்...கிராம மக்கள் அறிவிப்பால் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/028a81f84391529e83cce49a0358c3971708598167661113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிராம மக்களுடன் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கிராம மக்கள் அறிவித்ததால் அவர்களுடன் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருவையாறு வட்டத்திலுள்ள விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம், சிறுபுலியூர், கடுவெளி, ஆக்கிநாதபுரம், பொன்னாவரை, கல்யாணபுரம், தில்லைஸ்தானம், புனவாசல், மேலபுனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் விளாங்குடி உட்பட பல ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி உட்பட பல ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலை திட்டம்தான் உறுதுணையாக உள்ளது.
தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் எங்கள் விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம் ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். அனைத்து பொருட்களின் விலையும் உயர்வடைந்து விடும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.
மேலும் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தர்மராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமங்களில் விவசாய தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே அரசு வழங்கும் நூறு நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் பணி கிடைக்காமல் பாதிக்கப்படுவர். கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்பதால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவையாறு பேரூராட்சி அலுவலகம் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர் பேசுகையில், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆணை, அரசு வழிமுறைகள் ஏதும் வரப்பெறவில்லை என்றார். பின்னர் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த மக்கள் வருகிற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவதாகக் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மண்டலத் துணை வட்டாட்சியர் அம்மு, சரக வருவாய் ஆய்வர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரேணுகா, துளசிராமன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் புகழேந்தி, பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராம், பிரதீப் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலர் கதிரவன், அதிமுக கிளைச் செயலாளர் திருஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவையாறு வட்டத்திலுள்ள விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம், சிறுபுலியூர், கடுவெளி, ஆக்கிநாதபுரம், பொன்னாவரை, கல்யாணபுரம், தில்லைஸ்தானம், புனவாசல், மேலபுனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் விளாங்குடி உட்பட பல ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி உட்பட பல ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலை திட்டம்தான் உறுதுணையாக உள்ளது.
தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் எங்கள் விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம் ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். அனைத்து பொருட்களின் விலையும் உயர்வடைந்து விடும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.
மேலும் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தர்மராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமங்களில் விவசாய தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே அரசு வழங்கும் நூறு நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் பணி கிடைக்காமல் பாதிக்கப்படுவர். கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்பதால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவையாறு பேரூராட்சி அலுவலகம் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர் பேசுகையில், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆணை, அரசு வழிமுறைகள் ஏதும் வரப்பெறவில்லை என்றார். பின்னர் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த மக்கள் வருகிற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவதாகக் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மண்டலத் துணை வட்டாட்சியர் அம்மு, சரக வருவாய் ஆய்வர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரேணுகா, துளசிராமன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் புகழேந்தி, பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராம், பிரதீப் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலர் கதிரவன், அதிமுக கிளைச் செயலாளர் திருஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion