மேலும் அறிய

தேர்தலை புறக்கணிக்கிறோம்...கிராம மக்கள் அறிவிப்பால் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை

கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்பதால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

 
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கிராம மக்கள் அறிவித்ததால் அவர்களுடன் வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருவையாறு வட்டத்திலுள்ள விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம், சிறுபுலியூர், கடுவெளி, ஆக்கிநாதபுரம், பொன்னாவரை, கல்யாணபுரம், தில்லைஸ்தானம், புனவாசல், மேலபுனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் விளாங்குடி உட்பட பல ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி உட்பட பல ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலை திட்டம்தான் உறுதுணையாக உள்ளது.

தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் எங்கள் விளாங்குடி, காருகுடி, இராயம்பேட்டை, திருப்பழனம் ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். அனைத்து பொருட்களின் விலையும் உயர்வடைந்து விடும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.

மேலும் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தர்மராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமங்களில் விவசாய தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே அரசு வழங்கும் நூறு நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் பணி கிடைக்காமல் பாதிக்கப்படுவர். கிராமத்தின் தனி சுயாட்சி பாதிக்கப்படும் என்பதால், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

இல்லாவிட்டால் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவையாறு பேரூராட்சி அலுவலகம் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர் பேசுகையில், இக்கிராமங்களைத் திருவையாறு பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆணை, அரசு வழிமுறைகள் ஏதும் வரப்பெறவில்லை என்றார். பின்னர் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த மக்கள்  வருகிற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவதாகக் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மண்டலத் துணை வட்டாட்சியர் அம்மு, சரக வருவாய் ஆய்வர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரேணுகா, துளசிராமன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் புகழேந்தி, பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராம், பிரதீப் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலர் கதிரவன், அதிமுக கிளைச் செயலாளர் திருஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget