மேலும் அறிய

பஸ் நிறுவனத்தில் முதலீடு.....பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல்...தஞ்சையில் பரபரப்பு..!

தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு.

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட காவல் அலுவலகம் பிரிவு சாலையில் ராஹத் பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர் சுமார் 900 பேர் வழக்கில் முன்னேற்றம் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதி ராஹத் தனியார் பஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் கமாலுதீன் என்பவர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ராஹத் பஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை முதலீடு செய்தனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.10,500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதை தெரிந்து மேலும் பலர் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ராஹத் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பங்கு தொகை வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பஸ் நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். மேலும் தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் ராஹத் பஸ் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கமாலுதீன் மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தங்களின் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கும் அதிகமானோர் புகார் மனுவை அளித்தனர்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட காவல் அலுவலகம் பிரிவு சாலையில் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 900 பேர் ஜபருல்லா என்பவர் தலைமையில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து ராஹத் நிறுவனம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை உடன் பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் நடத்த முயன்றனர்.

பஸ் நிறுவனத்தில் முதலீடு.....பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல்...தஞ்சையில் பரபரப்பு..!
தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா, வல்லம் டி.எஸ்.பி., நித்யா மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணை பொருளாதார குற்றவியல் பிரிவில் நடந்து வருகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
West Bengal Vs EC: SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
BJP: 2014ல் பாஜகவின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? 11 ஆண்டுகளில் குவித்தது எவ்வளவு? 2025ல் சொத்துகள்
BJP: 2014ல் பாஜகவின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? 11 ஆண்டுகளில் குவித்தது எவ்வளவு? 2025ல் சொத்துகள்
Embed widget