மேலும் அறிய

கர்நாடகாவில் நடந்த சாரண, சாரணிய பெருந்திரளணி முகாமில் திறமையை காட்டி பேட்ஜ் பெற்ற தஞ்சை மாணவிகள்

தஞ்சை பள்ளி மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து தலா 9 பேட்ஜ்களை பெற்று அசத்தி உள்ளனர். மேலும் இந்த முகாமில் பங்கேற்றதற்கான பன்னாட்டு அளவிலான சான்றிதழ்களையும் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

திறமைசாலிகளின் வெற்றிக்கள் மதிப்பு மிக்கவை. காலில் தைக்கும் முள்ளை கையால் எடுக்கிறோம். அப்போ முள் மதிப்பு மிக்கதா? இல்லை. அதுபோல்தான் தோல்வியை புறந்தள்ளி வெற்றியை நோக்கி வீறுநடை போட வேண்டும். அப்படி செய்தால் வெற்றிக்கோடு உன்னை நோக்கி ஓடி வரும். விடாமுயற்சி விண்ணை தொடுமா? தொடும்... தொட்டுள்ளது. எங்கு தெரியுங்களா? தஞ்சையில்தான்.

அரசு பள்ளி என்றால் பார்க்கும் பார்வையே வேறாக இருந்த காலம் மலையேறி விட்டது. சாதிக்க பிறந்தவர்கள் அரசு பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்று மாணவ, மாணவிகள் நிரூபித்து வருகின்றனர். ஒன்றா இரண்டா முத்து மாலையை போன்று அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விதத்திலும் மிளர்கின்றனர். ஒளிர்கின்றனர்

படிப்பு, விளையாட்டு, தனித்திறமைகள் என்று தங்களையும் உயர்த்திக் கொண்டு தங்கள் பள்ளியின் பெருமையை அனைவரும் உணர வைக்கின்றனர். அந்த வகையில் தஞ்சை மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி சாரண மாணவிகள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று தங்கள் பள்ளிக்கு பெருமையை அள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரி ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி முகாம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் 18 நாடுகளை சேர்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பிரமாண்டமாக நடந்த இந்த முகாமில் தஞ்சை கல்வி மாவட்டத்தின் சார்பில் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் பத்தாம் வகுப்பை சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9ம் வகுப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் சாரணிய ஆசிரியை இந்துமதி தலைமையில் பங்கேற்றனர்.


கர்நாடகாவில் நடந்த சாரண, சாரணிய பெருந்திரளணி முகாமில் திறமையை காட்டி பேட்ஜ் பெற்ற தஞ்சை மாணவிகள்

இவர்களை சாரண இயக்க மாவட்ட செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரமௌலி ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றார். பெருந்திரளணி முகாமில் நடந்த பல்வேறு செயல்பாடுகளில் இம்மாணவிகள் பங்கேற்றனர். தாங்கள் பங்கேற்ற செயல்பாடுகளில் தங்களின் திறமையை காட்டி பேட்ஜ் பெற்றுள்ளனர். இப்படி ஒவ்வொரு மாணவியும் தலா 9 எண்ணிக்கையில் பேட்ஜ் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும் கொடுக்கப்படும் டாஸ்க்களில் குறிப்பிட்டவற்றை முடிக்க வேண்டும். அப்படி முடித்தால்தான் பேட்ஜ் பெற முடியும்.

அந்தவகையில் தஞ்சை மானோஜிப்பட்டி பள்ளி மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து தலா 9 பேட்ஜ்களை பெற்று அசத்தி உள்ளனர். மேலும் இந்த முகாமில் பங்கேற்றதற்கான பன்னாட்டு அளவிலான சான்றிதழ்களையும் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர். மேற்கண்ட மாணவிகள் 9 பேரும் இதற்கு முன்பு மாவட்ட அளவில் நடந்த பல்வேறு கலை விழாக்களில் விருது, பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளிகளில் பங்கேற்றது நாங்கள் மட்டும்தான். எங்கள் பள்ளி சாரண மாணவிகள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இந்த முகாம் முக்கியமான ஒன்றாகும். இந்திய அளவில் முதன்முறையாக நடைபெற்ற சர்வதேச கலாச்சார பெருந்திரளணி முகாமில் பங்கேற்று பேட்ஜ் மற்றும் சான்றிதழ்களை பெற்று அசத்தி உள்ளனர். இது எங்கள் பள்ளிக்கு மிகுந்த பெருமையை சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள உயர்நிலைப்பள்ளியும் எங்களுடையதுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget