மேலும் அறிய

கர்நாடகாவில் நடந்த சாரண, சாரணிய பெருந்திரளணி முகாமில் திறமையை காட்டி பேட்ஜ் பெற்ற தஞ்சை மாணவிகள்

தஞ்சை பள்ளி மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து தலா 9 பேட்ஜ்களை பெற்று அசத்தி உள்ளனர். மேலும் இந்த முகாமில் பங்கேற்றதற்கான பன்னாட்டு அளவிலான சான்றிதழ்களையும் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

திறமைசாலிகளின் வெற்றிக்கள் மதிப்பு மிக்கவை. காலில் தைக்கும் முள்ளை கையால் எடுக்கிறோம். அப்போ முள் மதிப்பு மிக்கதா? இல்லை. அதுபோல்தான் தோல்வியை புறந்தள்ளி வெற்றியை நோக்கி வீறுநடை போட வேண்டும். அப்படி செய்தால் வெற்றிக்கோடு உன்னை நோக்கி ஓடி வரும். விடாமுயற்சி விண்ணை தொடுமா? தொடும்... தொட்டுள்ளது. எங்கு தெரியுங்களா? தஞ்சையில்தான்.

அரசு பள்ளி என்றால் பார்க்கும் பார்வையே வேறாக இருந்த காலம் மலையேறி விட்டது. சாதிக்க பிறந்தவர்கள் அரசு பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்று மாணவ, மாணவிகள் நிரூபித்து வருகின்றனர். ஒன்றா இரண்டா முத்து மாலையை போன்று அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விதத்திலும் மிளர்கின்றனர். ஒளிர்கின்றனர்

படிப்பு, விளையாட்டு, தனித்திறமைகள் என்று தங்களையும் உயர்த்திக் கொண்டு தங்கள் பள்ளியின் பெருமையை அனைவரும் உணர வைக்கின்றனர். அந்த வகையில் தஞ்சை மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி சாரண மாணவிகள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று தங்கள் பள்ளிக்கு பெருமையை அள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரி ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி முகாம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் 18 நாடுகளை சேர்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பிரமாண்டமாக நடந்த இந்த முகாமில் தஞ்சை கல்வி மாவட்டத்தின் சார்பில் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் பத்தாம் வகுப்பை சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9ம் வகுப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் சாரணிய ஆசிரியை இந்துமதி தலைமையில் பங்கேற்றனர்.


கர்நாடகாவில் நடந்த சாரண, சாரணிய பெருந்திரளணி முகாமில் திறமையை காட்டி பேட்ஜ் பெற்ற தஞ்சை மாணவிகள்

இவர்களை சாரண இயக்க மாவட்ட செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரமௌலி ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றார். பெருந்திரளணி முகாமில் நடந்த பல்வேறு செயல்பாடுகளில் இம்மாணவிகள் பங்கேற்றனர். தாங்கள் பங்கேற்ற செயல்பாடுகளில் தங்களின் திறமையை காட்டி பேட்ஜ் பெற்றுள்ளனர். இப்படி ஒவ்வொரு மாணவியும் தலா 9 எண்ணிக்கையில் பேட்ஜ் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும் கொடுக்கப்படும் டாஸ்க்களில் குறிப்பிட்டவற்றை முடிக்க வேண்டும். அப்படி முடித்தால்தான் பேட்ஜ் பெற முடியும்.

அந்தவகையில் தஞ்சை மானோஜிப்பட்டி பள்ளி மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து தலா 9 பேட்ஜ்களை பெற்று அசத்தி உள்ளனர். மேலும் இந்த முகாமில் பங்கேற்றதற்கான பன்னாட்டு அளவிலான சான்றிதழ்களையும் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர். மேற்கண்ட மாணவிகள் 9 பேரும் இதற்கு முன்பு மாவட்ட அளவில் நடந்த பல்வேறு கலை விழாக்களில் விருது, பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளிகளில் பங்கேற்றது நாங்கள் மட்டும்தான். எங்கள் பள்ளி சாரண மாணவிகள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இந்த முகாம் முக்கியமான ஒன்றாகும். இந்திய அளவில் முதன்முறையாக நடைபெற்ற சர்வதேச கலாச்சார பெருந்திரளணி முகாமில் பங்கேற்று பேட்ஜ் மற்றும் சான்றிதழ்களை பெற்று அசத்தி உள்ளனர். இது எங்கள் பள்ளிக்கு மிகுந்த பெருமையை சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள உயர்நிலைப்பள்ளியும் எங்களுடையதுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget