மேலும் அறிய

சாக்கடை நாற்றம் தாங்க முடியலை... எங்களுக்கு திருமணம் நடக்குமாங்கிறதே சந்தேகமாக இருக்கு!

சாக்கடை நாற்றம் தாங்க முடியலை...சாலையும் சரியில்லை எங்களுக்கு திருமணம் நடக்குமாங்கிறதே சந்தேகமாக இருக்கு மறியல் செய்த கிராம மக்கள்

அதிகாரிகளே சாலையும் சரியில்லை... சாக்கடை நாற்றமும் தாங்க முடியலை. இதுனால கல்யாணத்துக்கு பொண்ணு கூட கொடுக்க மாட்டாங்க போலிருக்கு என்று வேதனை தெரிவித்து ஒருவர் மனு கொடுக்க ஒரு கிராமமே திரண்டு வந்து சாலைமறியல் செய்ய போலீசார் திகைத்துதான் போய்விட்டனர். இது நடந்தது தஞ்சை – பூதலூர் சாலை களிமேடு அருகில்தான்.

சாலையில் ஓடுது சாக்கடை நீரு... தாங்க முடியலை முடை  நாற்றம், இதை சகிச்சுக்கிட்டு போகலாம்னு பார்த்தா சாலை இருக்கு குண்டு குழியுமாக இருக்கு. இந்த கிராமத்துல 50 இளைஞர்கள் இருக்கோம். இதே நிலை நீடித்தால் மணப்பெண் கிடைப்பது கூட கஷ்டமாக போயிடும் போலிருக்கு என்று வித்தியாசமான கோரிக்கையை மனுவாக கொடுத்து தஞ்சை அருகே கிராமத்தினர் சாலைமறியலில் நடத்த பரபரப்பு பற்றிக் கொண்டது.



சாக்கடை நாற்றம் தாங்க முடியலை... எங்களுக்கு திருமணம் நடக்குமாங்கிறதே சந்தேகமாக இருக்கு!

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அருகே உள்ளது பள்ளியேரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதை சீரமைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே, சாலையை சீரமைக்க கோரி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். சொல்லியும் பார்த்தோம். மனுவும் கொடுத்தோம். முடியலை. இதுக்கு மேல பொறுக்க முடியலை என்று செம கடுப்பான கிராம மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் தஞ்சை- பூதலூர் சாலையில் போக்குவரத்தை மறித்து அமர்ந்தனர்.

சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு என அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என கோஷமிட தகவல் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு பறக்க விரைந்து வந்த போலீசார் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த... இல்லங்க வந்து பாருங்க எங்க கிராமத்தை. அப்ப தெரியும் என்று மக்கள் ஆதங்கப்பட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


சாக்கடை நாற்றம் தாங்க முடியலை... எங்களுக்கு திருமணம் நடக்குமாங்கிறதே சந்தேகமாக இருக்கு!

பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போலீசார் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனராம். சாலை சீரமைக்கப்படும் என்றும் உறுதியும் கொடுத்துள்ளனர். இதை மறியல் நடத்தியவர்களிடம் கூறி போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் கடந்த பல ஆண்டாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களிலும், சாலைகளிலும் சாக்கடை நாற்றம் வீசுகிறது. எங்கள் கிராமத்தில் சுமார் 50 இளைஞர்கள் உள்ளனர். கிராமத்தின் நிலையை பார்த்து விட்டு பெண் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு திருமணம் ஆவது கடினம் என்ற நிலை உள்ளது. எங்கள் கிராமத்திற்கு அதிகாரிகள் வந்து பார்க்க சொல்லுங்க. அப்போ தெரியும் நாங்க எந்த அளவுக்கு பரிதாபமான நிலையில் இருக்கோம்ன்னு. பார்த்த பின்னாடியே நடவடிக்கை எடுக்கட்டும்" என்றனர்.

தலைப்பு செய்திகள்

இரவு பயணத்தை விட பகல் பயணமே வசதி: சோழன் எக்ஸ்பிரஸைத் தொடர்ந்து கூடுதல் ரயில்கள் தேவை
இரவு பயணத்தை விட பகல் பயணமே வசதி: சோழன் எக்ஸ்பிரஸைத் தொடர்ந்து கூடுதல் ரயில்கள் தேவை
ஐந்தாண்டுகளில் 3 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும் காவிரி டெல்டா!
ஐந்தாண்டுகளில் 3 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும் காவிரி டெல்டா!
டெல்டா மாவட்டங்களில் 2,407 விவசாயிகள் காத்திருப்பு! எதற்காக தெரியுங்களா?
டெல்டா மாவட்டங்களில் 2,407 விவசாயிகள் காத்திருப்பு! எதற்காக தெரியுங்களா?
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
TN Assembly: 5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
Embed widget