மேலும் அறிய

வேதனையுடன் மனு அளித்த தேப்பெருமாநல்லூர் மக்கள்... எதற்காக?

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் சம்பளத்தில் இருந்து தான் கிடைக்கிறது. கூலி வேலை இல்லாத நாட்களில் எங்கள் குடும்பத்திற்கு 100 நாள் வேலை திட்ட சம்பளம் தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துநூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் இன்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தேப்பெருமாநல்லூர் ஊராட்சி  இந்நாள் வரை சிறந்த ஊராட்சியாகவே இருந்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நாங்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள் . எங்களின் வாழ்வாதாரம்  ஊராட்சிக்கு உண்டான, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் சம்பளத்தில் இருந்து தான் கிடைக்கிறது. கூலி வேலை இல்லாத நாட்களில் எங்கள் குடும்பத்திற்கு 100 நாள் வேலை திட்ட சம்பளம் தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

மேலும் அரசின் பசுமை வீடு கட்டும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் காய்கறி சந்தை, அரசால் வழங்கப்படும் ஆடு மாடு வளர்ப்பு திட்ட நிதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியால் சிறு, குறு விவசாய கடன்கள். மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் எங்கள் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். 


வேதனையுடன் மனு அளித்த தேப்பெருமாநல்லூர் மக்கள்... எதற்காக?

இந்நிலையில் தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள எங்கள் பகுதியை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக ( நகர் பகுதி ) அரசாணை வெளிவந்ததாக நாங்கள் அறிகிறோம். இந்த அறிவிப்பு எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. மாநகராட்சி ஆகும் பட்சத்தில் இது போன்ற திட்டங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் பல்வேறு வகையில் அதிக வரி சுமைக்கு ஆளாக நேரிடும். இதனால் பெரிதும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே  கள ஆய்வு செய்து தொடர்ந்து தேப்பெருமாநல்லூர் ஊராட்சியாகவே செயல்பட ஆவன செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாரியம்மன் கோயில் ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்தான். வறுமையான நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கூலி வேலை மற்றும் 100 நாள் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர வேறு எந்த வகையிலும் எங்களுக்கு வருமானம் இல்லை.

இந்நிலையில் மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டால் 100 நாள் வேலை செய்யும் நாங்கள் வேலை இழந்தும் அதிகமான வரி செலுத்தும் நிலை உருவாகும். ஏற்கனவே வறுமை நிலையில் உள்ள எங்களால் இந்த வரியை கட்ட முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே பல்வேறு இடர்பாடுகளுடன் வாழ்நது வரும் எங்களுக்கு  எனவே எங்கள் வாழ்வாதாரத்தின் நலன் கருதி மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Embed widget