மேலும் அறிய

வேதனையுடன் மனு அளித்த தேப்பெருமாநல்லூர் மக்கள்... எதற்காக?

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் சம்பளத்தில் இருந்து தான் கிடைக்கிறது. கூலி வேலை இல்லாத நாட்களில் எங்கள் குடும்பத்திற்கு 100 நாள் வேலை திட்ட சம்பளம் தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துநூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் இன்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தேப்பெருமாநல்லூர் ஊராட்சி  இந்நாள் வரை சிறந்த ஊராட்சியாகவே இருந்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நாங்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள் . எங்களின் வாழ்வாதாரம்  ஊராட்சிக்கு உண்டான, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் சம்பளத்தில் இருந்து தான் கிடைக்கிறது. கூலி வேலை இல்லாத நாட்களில் எங்கள் குடும்பத்திற்கு 100 நாள் வேலை திட்ட சம்பளம் தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

மேலும் அரசின் பசுமை வீடு கட்டும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் காய்கறி சந்தை, அரசால் வழங்கப்படும் ஆடு மாடு வளர்ப்பு திட்ட நிதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியால் சிறு, குறு விவசாய கடன்கள். மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் எங்கள் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். 


வேதனையுடன் மனு அளித்த தேப்பெருமாநல்லூர் மக்கள்... எதற்காக?

இந்நிலையில் தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள எங்கள் பகுதியை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக ( நகர் பகுதி ) அரசாணை வெளிவந்ததாக நாங்கள் அறிகிறோம். இந்த அறிவிப்பு எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. மாநகராட்சி ஆகும் பட்சத்தில் இது போன்ற திட்டங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் பல்வேறு வகையில் அதிக வரி சுமைக்கு ஆளாக நேரிடும். இதனால் பெரிதும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே  கள ஆய்வு செய்து தொடர்ந்து தேப்பெருமாநல்லூர் ஊராட்சியாகவே செயல்பட ஆவன செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாரியம்மன் கோயில் ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்தான். வறுமையான நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கூலி வேலை மற்றும் 100 நாள் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர வேறு எந்த வகையிலும் எங்களுக்கு வருமானம் இல்லை.

இந்நிலையில் மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டால் 100 நாள் வேலை செய்யும் நாங்கள் வேலை இழந்தும் அதிகமான வரி செலுத்தும் நிலை உருவாகும். ஏற்கனவே வறுமை நிலையில் உள்ள எங்களால் இந்த வரியை கட்ட முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே பல்வேறு இடர்பாடுகளுடன் வாழ்நது வரும் எங்களுக்கு  எனவே எங்கள் வாழ்வாதாரத்தின் நலன் கருதி மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
65
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget