மேலும் அறிய

படிக்கட்டில் பயணம்... எந்த நொடியும் மரணம்: ஆபத்து கண்ணா... இது ஆபத்து

ஆபத்து கண்ணா... இது ரொம்ப ஆபத்து என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும் தஞ்சையில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: ஆபத்து கண்ணா... இது ரொம்ப ஆபத்து என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும் தஞ்சையில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இது உயிரை பறிக்கும் பயணம் என்று தெரிந்தும் தொடர் கதையாக படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.

தஞ்சையில் பஸ்களில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மாணவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பஸ் பாரம் தாங்காமல் சாய்ந்தபடியே சென்று வருகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமப்புறத்தில் இருந்து செல்லும் மாணவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதே போல் கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. இதற்காக தஞ்சை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இதில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த பஸ் மற்றும் வேன்கள் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.


படிக்கட்டில் பயணம்... எந்த நொடியும் மரணம்: ஆபத்து கண்ணா... இது ஆபத்து

அரசு வழங்கும் பஸ் பாஸில் செல்கின்றனர்

அதே போல் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிலர் அரசால் வழங்கப்பட்ட மற்றும் தங்கள் பெற்றோர் வாங்கி கொடுத்த சைக்கிள்கள் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை ஆட்டோக்களில் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் வாகனத்தில் செல்ல முடிவதில்லை. மாறாக  அவர்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட பஸ்பாஸ் மூலம் அரசு டவுன் பஸ்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை

ஆனால் மாணவர்களின் வசதிக்காக போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. ஒரே நேரத்தில் அதிகளவில் மாணவர்கள் செல்லும் போது கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பஸ்களில் போதிய இடம் கிடைக்காததால் அவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். இது தொடர் கதை போல் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாரியம்மன் கோவில், பூண்டி, சாலியமங்கலம், அம்மாப்பேட்டை வரை செல்லும் டவுன் பஸ்சில் மாணவர்கள் பஸ்சின் முன்புறம் மற்றும் பின்புறம் படிக்கட்டில் தொங்கியவாறு சென்றனர்.

படிக்கட்டில் தொங்கியபடியே செல்லும் மாணவர்கள்

பஸ்சின் பின் பக்க படிக்கட்டில் ஒரே நேரத்தில் சுமார் 10 மாணவர்களுக்கு மேல் தொங்கியவாறு சென்றனர். இதனால் பஸ் பாரம் தாங்காமல் ஒரு பகுதியாக சாய்ந்த வண்ணம் சென்றது. வேகத்தடை வரும் இடங்களில் பஸ்சின் 2 படிகளும் வேகத்தடையில்  உரசியவாறு சென்றது.

மேலும் மாணவர்கள் தங்கள் செருப்பு தரையில் உரசியவாறு தொங்கி கொண்டு சென்றனர். பஸ் ஒரு பகுதியாக சாய்ந்தவாறு சென்றதால் பஸ்சை டிரைவர் சிரமத்துடன் ஒட்டி சென்றார். இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டுனர்கள், பஸ்சில் தொங்கியவாறு செல்லும் மாணவர்களை திட்டியவாறு சென்றனர்.

பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை

இதுகுறித்து பொது மக்கள் தரப்பில் கூறுகையில், மாணவர்கள், பொதுமக்கள் ஒரே நேரத்தில் பஸ்சில் செல்லும் போது கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல தாமதம் ஏற்பட்டால் சாலையில் செல்லும் பைக்குகளில் லிப்ட் கேட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. குறிப்பாக தேர்வு நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே காலை மாலை நேரங்களில் பஸ்களில் மாணவர்களின் ஆபத்தான பயணத்தை தவிர்க்க அரசு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்  கூறினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Premalatha Discussion: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha Discussion: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
Embed widget