மேலும் அறிய

“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

தஞ்சாவூர்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், மக்கள் மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளை வாங்கி எங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.


“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வகையில் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை தீபத்திருநாளில் வீடுகளின் வெளிப்புறங்கள், வீட்டின் முற்றத்திலும் அகல் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கார்த்திகை தீபத் திருநாள் கொடுக்கும். இந்த தீபத்தை களிமண்ணால் செய்த அகல் விளக்குகளில் ஏற்றி வழிபாடு நடத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் மவுசு என்றால் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளுக்குதான். தஞ்சாவூரிலும் மண் அகல் விளக்குகள் விற்பனை நடந்து வருகிறது.


“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய திசை எல்லாம் அகல் விளக்குகள் காய வைக்கப்பட்டு இருக்கும். கால் வைத்து நடக்க முடியாத அளவிற்கு அந்த தெருவில் அனைத்து வீடுகளின் வாசலில் காய வைத்து இருப்பார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. அங்கொன்றும். இங்கொன்றுமாக அரிதாக ஒரு சிலர் அகல் விளக்கு தயாரித்து வந்தனர்.

அகல் விளக்கு தயாரிக்கும் மண் பாண்ட தொழிலாளர் சுப்ரமணியன் என்பவர் கூறியதாவது: பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். கார்த்திகை தீபத்திற்காக அகல்விளக்கு செய்து வருகிறோம். ஒரு ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன 


“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

வழக்கமாக பித்தளையில் விளக்கு ஏற்றினாலும் கார்த்திகை தீபத்திற்கு மண்  விளக்கேற்றுவார்கள். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மண் விளக்குகளில் நவீன முறையில் வர்ணம் பூசி செய்து வருகிறோம். இந்த பகுதியில் 100 குடும்பங்கள் மண்பாண்டத் தொழில் செய்து வந்தோம்.  எல்லோரும் தொழிலை விட்டு சென்றதால் தற்போது 5 குடும்பங்கள் மட்டும் செய்து வருகிறோம்.
.
பாரம்பரிய தொழில் அழிந்து விடக் கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு செய்து வருகிறோம். வருமானம் மிகவும் குறைந்து விட்டதால் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். மண் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது.  வைக்கோல் ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்கபட்டது இன்று 300 ரூபாய் விற்கப்படுகிறது. 1000 ரூபாய்க்கு விற்ற மட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறோம்.

மக்கள் விலை ஏற்றம்னு நினைக்காமல் அகல் விளக்கு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். எங்கள் வாழ்க்கை மக்கள் கையில் உள்ளது. அடுத்த தலைமுறைக்கு மண் அகல்விளக்கு செய்ய ஆளே இருக்காது என்ற நிலை உருவாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ABP Premium

வீடியோ

பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!
PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamaalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
Embed widget