மேலும் அறிய

தஞ்சாவூரில் தாட்கோ சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள்: பயனாளிகளிடம் நேரில் ஆய்வு

தாட்கோ சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப்பணிகள் நடந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணனுடன் நேரில் சந்தித்து தாட்கோ சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.

பயனாளிகளுடன் நேரில் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணன் தாட்கோ மூலம் பயன்பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணன்  தெரிவித்ததாவது: தாட்கோ மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் அவர்களுக்கு உலர் மீன் விற்பனையகம் ரூ.8,00,000 திட்ட மதிப்பீட்டில் ரூ.2,80,000 மானியத்தில் ரூ.4,80,000 வங்கிக் கடன் தொகையும், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த வினோதினி அவர்களுக்கு பல்மருத்துவமனை ஆரம்பிக்க ரூ.7,00,000 திட்ட மதிப்பீட்டில் ரூ.2,10,000 மானியத்தில் ரூ.4,55,000 வங்கிக் கடன் தொகையும், திருக்கருக்காவூரைச் சேர்ந்த திரு.சதீஸ் குமார் என்பவருக்கு உரக்கடை அமைக்க ரூ.8,00,000 திட்ட மதிப்பீட்டில் ரூ.2,80,000 மானியத்தில் 5.4,80,000 வங்கிக் கடன் தொகையும் பெற்று ஆரம்பிக்கப்பட்ட தொழிலககங்களை நேரில் ஆய்வு செய்தார்.

வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்

வங்கி கடன் பெறுவதில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், தொழில் தொடங்கிய பின் அவர்களது வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும், வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகை மற்றும் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரம் மேம்பாடு குறித்தும் பயனாளிகளிடம் கேட்டு அறியப்பட்டது. தாட்கோ மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெறுமாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைவர் மதிவாணன்  தெரிவித்தார்.

ஆய்வின் போது தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜ், உதவி மேலாளர்கள் செந்தில் குமரன் , ராஜ்குமார், மண்டல திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன், தாட்கோ செயற்பொறியாளர் வெங்கடேசன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தஞ்சாவூரில் தாட்கோ சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள்: பயனாளிகளிடம் நேரில் ஆய்வு

தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல்

இதேபோல் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

இதில் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1092 கோடி திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகம் மூலம் 85 நிறுவனங்களுடன் ரூ.1675.66 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 20 நிறுவனங்கள், ரூ.265 கோடி மதிப்பில் உற்பத்தியை தொடங்கி உள்ளன. மீதமுள்ள 65 நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு நிலையில் உள்ளது. அந்த நிறுவனங்களின் முன்னேற்றத்தை அறியும் பொருட்டு, நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தொழில் முனைவோர்கள், பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் தொழில் முனைவோர்கள் எதிர் கொள்ளும் இடர்பாடுகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மணிவண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்... தஞ்சாவூரில் பரபரப்பு
போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்
போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்
சிசிடிவி காட்சிகளால் அம்பலமான கொள்ளை: அரியலூரில் 27 ஆடுகள், 2 கார்கள் பறிமுதல்
சிசிடிவி காட்சிகளால் அம்பலமான கொள்ளை: அரியலூரில் 27 ஆடுகள், 2 கார்கள் பறிமுதல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget