மேலும் அறிய

மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231  கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு

’’4 தம்பதிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனம் ஒத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து ஒன்று சேர்ந்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,375 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 10.40 கோடி வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.மதுசூதனன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிபதி எஸ். ஜெயசிங், முதன்மை சார்பு நீதிபதி ஜி.என். சரவணகுமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. முகமது அலி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, மோட்டார் வாகன விபத்து வழக்குச் சிறப்பு சார்பு நீதிபதி எஸ். அண்ணாமலை,விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் எம். முருகேசன் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் காசோலை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி.சுந்தர்ராஜன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ.அனிதாகிருஷ்டி, இரண்டாவது நீதித்துறை நடுவர் பி.மோசஸ் ஜெபசிங் ஆகியோர் கொண்ட அமர்வில் உரிமையியல் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. மலர்விழி, கூடுதல் சார்பு நீதிபதி எம். முருகன், மூன்றாவது நீதித்துறை நடுவர் சி. பாரதி ஆகியோர் கண்ட அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் 2,375 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 10 கோடியே 40 லட்சத்து 21 ஆயிரத்து 231 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்குப் பெற்றுத் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா, தஞ்சாவூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் சி. அமர்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231  கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப் பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அதில் முதல் அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின்தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு எஸ்.பிரகாஷ் அவர்கள் தலைமையில், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி .எஸ். மும்தாஜ், வட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் திரு. செந்தில்குமார்  மற்றும் இரண்டாவது அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி. டி.சண்முகப்பிரியா அவர்கள் தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.வி.வெங்கடேசப்பெருமாள், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திருமதி ஆர்.கவிதா ஆகியோரது பங்கேற்பில் நடைபெற்றது.


மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231  கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு

அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் திரு.கே.நிலவரசன் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் தலைமையில் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1-ன் நீதிபதி திரு.பி.தரணிதர், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திரு. ஆர்.ரகுவீரன் பங்கேற்பில் மொத்தம் 638-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 439-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் 32-திருமண தகராறு சம்பந்தப்பட்ட வழக்குகளில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த தம்பதிகளிடம் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு எஸ்.பிரகாஷ் அவர்கள் குழுவினரின் கலந்தாய்வில் சமரசம் ஏற்பட்டு 4-தம்பதிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனம் ஒத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து ஒன்று சேர்ந்தனர், அவர்கள் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

32 காசோலை மோசடி வழக்குகளுக்கான தீர்வில் ரூ. 89,26,855 ம், 54 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.1,77,77,000,19 கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ. 7,83,495, 163 குற்றவியல் வழக்குகள் மூலம் ரூ.1,24,400 , 167 சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.97,100    என ஆக மொத்தம் ரூ.2,77,08,850 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், கே.குணசீலன மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Embed widget