மேலும் அறிய

மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231  கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு

’’4 தம்பதிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனம் ஒத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து ஒன்று சேர்ந்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,375 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 10.40 கோடி வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.மதுசூதனன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிபதி எஸ். ஜெயசிங், முதன்மை சார்பு நீதிபதி ஜி.என். சரவணகுமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. முகமது அலி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, மோட்டார் வாகன விபத்து வழக்குச் சிறப்பு சார்பு நீதிபதி எஸ். அண்ணாமலை,விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் எம். முருகேசன் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் காசோலை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி.சுந்தர்ராஜன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ.அனிதாகிருஷ்டி, இரண்டாவது நீதித்துறை நடுவர் பி.மோசஸ் ஜெபசிங் ஆகியோர் கொண்ட அமர்வில் உரிமையியல் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. மலர்விழி, கூடுதல் சார்பு நீதிபதி எம். முருகன், மூன்றாவது நீதித்துறை நடுவர் சி. பாரதி ஆகியோர் கண்ட அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் 2,375 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 10 கோடியே 40 லட்சத்து 21 ஆயிரத்து 231 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்குப் பெற்றுத் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா, தஞ்சாவூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் சி. அமர்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231  கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப் பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அதில் முதல் அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின்தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு எஸ்.பிரகாஷ் அவர்கள் தலைமையில், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி .எஸ். மும்தாஜ், வட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் திரு. செந்தில்குமார்  மற்றும் இரண்டாவது அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி. டி.சண்முகப்பிரியா அவர்கள் தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.வி.வெங்கடேசப்பெருமாள், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திருமதி ஆர்.கவிதா ஆகியோரது பங்கேற்பில் நடைபெற்றது.


மக்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சாவூரில் 10,40,21,231  கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு

அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் திரு.கே.நிலவரசன் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் தலைமையில் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1-ன் நீதிபதி திரு.பி.தரணிதர், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திரு. ஆர்.ரகுவீரன் பங்கேற்பில் மொத்தம் 638-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 439-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் 32-திருமண தகராறு சம்பந்தப்பட்ட வழக்குகளில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த தம்பதிகளிடம் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு எஸ்.பிரகாஷ் அவர்கள் குழுவினரின் கலந்தாய்வில் சமரசம் ஏற்பட்டு 4-தம்பதிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனம் ஒத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து ஒன்று சேர்ந்தனர், அவர்கள் தங்களது வழக்குகளை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

32 காசோலை மோசடி வழக்குகளுக்கான தீர்வில் ரூ. 89,26,855 ம், 54 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.1,77,77,000,19 கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ. 7,83,495, 163 குற்றவியல் வழக்குகள் மூலம் ரூ.1,24,400 , 167 சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.97,100    என ஆக மொத்தம் ரூ.2,77,08,850 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், கே.குணசீலன மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
இந்தியப் பயிறு வகைகளுக்கு மதிப்புக்கூட்டல் அவசியம்: மத்திய அரசுச் செயலாளர் கலைச்செல்வி வலியுறுத்தல்
இந்தியப் பயிறு வகைகளுக்கு மதிப்புக்கூட்டல் அவசியம்: மத்திய அரசுச் செயலாளர் கலைச்செல்வி வலியுறுத்தல்
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Embed widget