மேலும் அறிய

எம்.ஜி.ஆர்தான் பேரு வெச்சார்.. அரைகிலோ தங்க நகைகளுடன் பட்டுக்கோட்டையை வலம் வந்த மார்டன் பெண் சாமியார்

’’எம்ஜிஆர், அவருக்கு பெயர் சூட்டியதாகவும், ஜெயலலிதா, அவரை போயஸ் கார்டனில் அழைத்து பேசியதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அவரிடம் ஆசி பெற்ற பின்னர்தான் முதல்வர் ஆனதாகவும் அவரது சீடர்கள் தெரிவித்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் எழுந்தருளியுள்ள  அக்னி காளியம்மன் கோயில் குடமுழுக்கு  விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பொது மக்கள், கோட்டை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது  மாடன் உடையில், கண் இமையிலும், உதடுகளிலும் சாயம் பூசி, கழுத்து நிறைய சுமார் அரை கிலோ நகையையும், ஹைஹீல்ஸ் செருப்பும் அணிந்து பெண் சாமியார் வந்திருந்தார். தலைமுடியை வெள்ளை, செம்பட்டை நிறத்தில் கலரிங் செய்திருந்தார். இவர் அகில இந்திய இந்து யுவமோட்சா தர்மாச்சாரியா ஸ்ரீ பவித்ரா காளி மாதா என  அவருடைய பெயரை  தெரிவித்தனர்.


எம்.ஜி.ஆர்தான் பேரு வெச்சார்.. அரைகிலோ தங்க நகைகளுடன் பட்டுக்கோட்டையை வலம் வந்த மார்டன் பெண் சாமியார்

தன்னை சாமியார் என அழைக்கக்கூடாது எனவும், தான் காளி மாதா எனவும் சொல்லிக் கொண்டார். பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் அவரது சொந்த ஊர் எனவும், திண்டுக்கல்லில் தற்போது வசிப்பதாகவும், அவரின் சீடர்கள் தெரிவித்தனர். எம்ஜிஆர், அவருக்கு பெயர் சூட்டியதாகவும், ஜெயலலிதா, அவரை போயஸ் கார்டனில் அழைத்து பேசியதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அவரிடம் ஆசி பெற்ற பின்னர் தான் முதல்வர் ஆனதாகவும், எடியூரப்பா, அவரது மகன் இவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர்  எனவும் அவரோடு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த காளி மாதா ஸ்ரீ அக்கினி காளியம்மன் கோயில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பெரியவர், சிறியவர் என பாராமல் பலரும் அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.  பின்னர், பெண் சாமியார்  நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து பகுதிகளிலும் அதிக மழை பெய்துள்ளது. பயிர்கள் அனைத்தும் அழுகியுள்ளன.  இதுக்கு மேலே விவசாயிகளுக்கு கஷ்டம் தரக்கூடாது. அம்மா  நிறைந்த மனசோட சந்தோசமா இருக்கணும். நாம் எல்லோரையும் தீர்க்காயுசா, நல்லவிதமாக வைத்திருக்க வேண்டும்.  

எம்.ஜி.ஆர்தான் பேரு வெச்சார்.. அரைகிலோ தங்க நகைகளுடன் பட்டுக்கோட்டையை வலம் வந்த மார்டன் பெண் சாமியார்

நாடு சுபிட்சமாக வளமா இருக்கனும் என்பதற்காக, பவித்ரா காளி மாதாவுக்கு அழைப்பு கொடுத்ததால் இங்கே வந்திருக்கிறேன். எல்லோரையும் ஆசீர்வதிப்பதற்காகவும் வந்திருக்கிறேன். அக்னி காளியான பத்ரகாளியம்மனிடம் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வரம் கேட்க வந்திருக்கின்றோம். நான் டிஐஜி, எஸ்பி, பட்டுக்கோட்டை போலீசாரிடம் தகவல் சொல்லி, உத்தரவை கேட்டு விட்டு தான் வந்துள்ளேன். வேற எந்த உள்நோக்கமும் கிடையாது.  அனைவரும் நலமாக இருக்க வேண்டும். அம்மாவின் சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அதனை நிரூபனபடுத்துவதற்காக வந்துள்ளேன், இப்பகுதியில் பிறந்திருந்தாலும், ஆத்தாவின் உத்தரவால் வந்துள்ளேன். என்றார். மாடர்ன் பெண் சாமியார் தன்னை காளியின் அவதாரம் என சொல்லிக்கொண்டு பொதுமக்களும் ஆசி வழங்கியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10.5% உள் ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கத்தினர் திருவையாற்றில் போராட்டம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK LIVE Score: விக்கெட்டுகளை இழந்தாலும் பவர்ப்ளேவில் கெத்து காட்டிய சென்னையின் ஆட்டம் தொடருமா?
RCB vs CSK LIVE Score: விக்கெட்டுகளை இழந்தாலும் பவர்ப்ளேவில் கெத்து காட்டிய சென்னையின் ஆட்டம் தொடருமா?
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK LIVE Score: விக்கெட்டுகளை இழந்தாலும் பவர்ப்ளேவில் கெத்து காட்டிய சென்னையின் ஆட்டம் தொடருமா?
RCB vs CSK LIVE Score: விக்கெட்டுகளை இழந்தாலும் பவர்ப்ளேவில் கெத்து காட்டிய சென்னையின் ஆட்டம் தொடருமா?
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget