தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் இன்று பதவியேற்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்றார். இன்று தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் பதவி ஏற்றார்.
அவரிடம் முன்னாள் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் பி.ஜி.ராஜேந்திரன் புதிய மாவட்ட தலைவர் மகேந்திரனை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. தற்போது அனைத்து மதம், இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்து புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளது.
1925-ம் ஆண்டு தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அது 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிறேவேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளனர்.
தஞ்சை மாநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடித்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு புதிய மாவட்ட தலைவர் மகேந்திரன் செயல்பட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜேம்ஸ் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் மகேந்திரன் ஏற்புரையாற்றிப் பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரஸ் கட்சியில் அடிப்படை தொண்டனாக பணியாற்றிய என்னை தலைவராக நியமித்த சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ஆலோசனைப்படி கட்சியை வளர்க்க பாடுபடுவேன்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள், பெண்கள் சேர்த்து கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன். தஞ்சை மேலவீதி பகுதியில் உள்ள தியாகிகள் இல்லம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களை காங்கிரஸ் தலைமையின் ஆலோசனைப்படி மீட்டெடுக்க முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















