மேலும் அறிய

சாலையோர வியாபாரிகளின் பாராட்டு மழையில் நனையும் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்: எதற்காக!!!

பல்வேறு வகையான சாலையோர வியாபாரிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. முதலில் ரூ. 10,000/- மும் அந்த கடன் முடிவுற்றபிறகு  25000/- மும் அதன்பிறகு ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து செயல்படுத்தி வரும் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனுக்கு நாங்கள் மனப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளோம் என்று சாலையோர வியாபாரிகள் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர். என்ன காரணம் தெரியுங்களா?  

தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் மேயர் சண்.ராமநாதன். இது குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டமும் நடந்துள்ளது. 


சாலையோர வியாபாரிகளின் பாராட்டு மழையில் நனையும் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்: எதற்காக!!!

சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் என்பது கிடைக்காத ஒன்று. மழை, வெயில் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். மேலும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் வட்டிக்கு கொடுக்கும் நிலையே இருந்து வந்தது. இதனால் அவர்கள் வாழ்க்கை நிலை மிகவும் சிரமத்திற்கு உரிய ஒன்றாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலோடு 'தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகள் பயன்படும் வகையில் அவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் வாயிலாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இது தினசரி காய்கறி வியாபாரம், தள்ளுவண்டியில் உணவகம் வைத்திருப்பவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் என்று பல்வேறு வகையான சாலையோர வியாபாரிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. முதலில் ரூ. 10,000/- மும் அந்த கடன் முடிவுற்றபிறகு  25000/- மும் அதன்பிறகு ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2929 சாலையோர வியாபாரிகள் ரூ. 10,000 மும்,1035 சாலையோர வியாபாரிகள் ரூ. 25,000 மும், 217 சாலையோர வியாபாரிகள் ரூ. 50,000 மும் மொத்தம் 4,181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டும், அவர்களது நலன் கருதி குழுக்கள்  அமைக்கப்பட்டு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் வருமானத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் செயல்படுத்தி வருகிறார். மாநகராட்சியால் செய்யப்பட்டிருந்த விதி 270 வசூல்-ன் கீழ் சாலையோர கடைகளுக்கான தொகையினை தினந்தோறும் வசூல் செய்வதனை ரத்தும் செய்துள்ளார். இதுவரை 4181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லாத கடன்களை பெற்று தங்களின் வியாபாரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். மேலும் 2000 வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற விண்ணப்பித்துள்ளனர்.

இனி வரும் காலங்களிலும் சாலையோர கடைகளுக்கு எவ்விதமான தொகையும் வசூல் செய்யப்படாது . சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனை பெறுவதற்கும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும் மாநகராட்சியினை அனுகி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதிக வட்டிக்கு பணம் வாங்கி அவதியடைந்துள்ள நிலை தற்போது மாறியுள்ளது. இனியும் அவர்கள் தங்களின் வியாபாரத்தை மாநகராட்சி மூலம் வழங்கப்படும் வட்டியில்லா கடனை பெற்று சரியான முறையில் திருப்பி செலுத்தி மேலும் பண உதவி பெற்று பயனடையலாம். 

இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்தி வரும் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், சாலையோர வியாபாரிகள் நலனையும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள இந்த திட்டம் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தினர் எவ்வித பொருளாதார நெருக்கடியிலும், இடர்பாடுகளிலும் சிக்கி கொள்ளாத வகையில் வட்டியில்லாத கடனை வழங்கி உதவி வருகிறோம் என்றார். 

சாலையோர வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தொடர்ந்து எங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோருக்கு நாங்கன் மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிரமப்பட்டு உழைக்கும் பணத்தை வட்டிக்கே கொடுத்து எங்களின் வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள முடியாமல் தவித்து வந்தோம். இந்த வட்டியில்லா கடன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகத்தினருக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget