மேலும் அறிய

Thanjavur: மகளின் காதலுக்கு துணை போன தொழிலாளி கொலை; அப்பா, மகன்களுக்கு ஆயுள்தண்டனை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காதலுக்கு துணை போனதாக சென்டிரிங் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் நான்கு மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காதலுக்கு துணை போனதாக சென்டிரிங் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் நான்கு மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் அன்பரசியை அதே தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான கருப்புசாமி என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இதையறிந்த அன்பழகன் கருப்புசாமியை கண்டித்துள்ளார். இந்நிலையில் அன்பரசி, கருப்புசாமி காதலுக்கு அதே தெருவை பவுன்ராஜ் மகன் சுந்தரபாண்டியன் (36) என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகன் குடும்பத்தினர் சுந்தரபாண்டியனிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அன்பழகன் மற்றும் பவுன்ராஜ் குடும்பத்தினர் மத்தியில் பிரச்னை இருந்து வந்துள்ளது. 

இதனால், அன்பழகனுக்கும், பவுன்ராஜ் குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2017ம் ஜனவரி 11ம் தேதி இரவு, பவுன்ராஜ் தனது மனைவி தமிழரசி, மகன்கள் சுந்தரபாண்டியன், மருதுபாண்டி,கார்த்தி ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த அன்பழகன் அவரது மகன்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகியோர் சேர்ந்து, சுந்தரபாண்டியனை கத்தியால் குத்தி தாக்கினார். இதை தடுக்க சென்ற பவுன்ராஜ், கார்த்தி இருவரையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அன்பழகன் (60) அன்புநிதி (32), அறிவுநிதி (30), அருள்நிதி (28), அழகுநிதி (26) ஆகியோரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி ராதிகா இந்த வழக்கை விசாரித்து அன்பழகன் மற்றும் அவரது மகன்கள் 4 பேர் உட்பட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 13,750 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அன்பழகன் உட்பட 5 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவம் அப்போது கும்பகோணம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்கு, அரசு தரப்பில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதற்கும் பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget