மேலும் அறிய

வழக்கில் ஆஜராகாத எஸ்.ஐ. உட்பட 4 போலீசாருக்கு பிடிவாரண்ட் - தஞ்சை மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு

வழக்கில் ஆஜராகாத தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய எஸ்.ஐ., உட்பட நான்கு பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்து தஞ்சை மனித உரிமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரோதயம் மகன் இளவரசன் (40). கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வீட்டில் தனது தாய் சசிகலாவுடன் இருந்தார். அப்போது, தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் (2011ம் ஆண்டு) எஸ்.ஐ.,யாக பணியாற்றிய கழனியப்பன் மற்றும் போலீசார் கணேசன், அண்ணாதுரை ஆகிய மூன்று  பேரும் இளவரசனின் வீட்டிற்கு சென்று எவ்வித காரணமும் சொல்லாமல், அவரை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, இளவரசனின் உடைகளை கழட்டி உள்ளாடையோடு லத்தியால் இடுப்பிற்கு கீழே கடுமையாக தாக்கியுள்ளனர். தன் மகனை போலீசார் இழுத்து சென்றதால் இளவரசனின் தந்தை சந்திரோதயம், தாய் சசிகலா இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கேட்ட போது, போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து இருவரும் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக, மகனை போலீசார் பிடித்து வந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

உடனடியாக மகனை விட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்துக்கொள்ளுவோம் என உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து போலீசார் அன்று இரவு இளவரசனை விடுவித்தனர். இளவரசனுக்கு நீதி கேட்டு அவரது தந்தை சந்திரோதயம் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இவ்வழக்கில் எஸ்.ஐ., கழனியப்பன் மற்றும் போலீசார் கணேசன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி ஆகிய நாலு பேர் மீதும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது.

இவ்வழக்கு விசாரணையின் போது எஸ்.ஐ., கழனியப்பன், கணேசன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி ஆகிய நான்கு பேரும் ஆஜராகாததால் அவர்களுக்கு நீதிபதி  மதுசூதனன் பிடிவாரண்டு பிறப்பித்து  
உத்தரவிட்டார். கழனியப்பன் என்பவர் தற்போது திருத்துறைப்பூண்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




லஞ்சம் வாங்கிய வழக்கில் 4 பேருக்கு சிறை

லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் தஞ்சாவூர் வணிக வரி அலுவலர்கள் 4 பேருக்கு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூர் வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்த குணசேகரிடம் வணிக வரி அலுவலர்கள் 6 பேர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தங்கள் மீது புகார் வந்துள்ளது என்று கூறி விசாரணை நடத்தினர். மேலும் வரியைக் குறைத்து செலுத்திக் கொள்ளவும் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 12,000 லஞ்சம் அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ. 1.50 லட்சம் வரி போடுவதாகவும் மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து, குணசேகரிடம் லஞ்சம் பெற்ற வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, முத்துக்கிருஷ்ணன், மகாலெட்சுமி, அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சண்முகப்ரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, முத்துக்கிருஷ்ணன், மகாலெட்சுமி, சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 4,000 அபராதமும் விதித்து  தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கெனவே காலமாகிவிட்டார்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Embed widget