மேலும் அறிய

கோடைக்காலத்தை விட மோசமாக சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் தஞ்சை மக்கள்

ஆடி மாதத்திலும் கோடைகாலம் போல் கொளுத்தி எடுக்கும் வெயிலால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர். தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

தஞ்சாவூர்: ஆடி மாதத்திலும் கோடைகாலம் போல் கொளுத்தி எடுக்கும் வெயிலால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர். தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தஞ்சை பகுதியில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலத்தின் தொடக்க முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலமான மே 4ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழையும் பெய்தது. அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் குறையவே இல்லை. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் கொளுத்தியதை போன்று வெயில் வாட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் வெயில் தாக்கம் குறைவாக இருந்தாலும் காற்று வீசி வருகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவில் காற்று வீசுகிறது. ஆனால் பகல் நேரங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதால் பகலில் அனல்காற்று வீசுகிறது.


கோடைக்காலத்தை விட மோசமாக சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் தஞ்சை மக்கள்

 

நேற்றும் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இன்று காலை முதல் வெயில் அதிகமாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்கள், நடந்து செல்பவர்களும் அனல் காற்றினால் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் பொதுமக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு செல்லும் அளவிற்கு வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட இளநீர், கரும்புசாறு, மோர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் மற்றும் பழச்சாறு, குளிர்பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி பருகினர். இதனால் அந்த கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது

நேற்று விடுமுறை என்பதால் பெரிய கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கோயிலுக்கு வந்தவர்களும் வெயிலின் தாக்கம் காரணமாக தலையை துணியால் மூடியபடி சென்றனர். கோடைகாலத்தை விட தற்போது இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget