மேலும் அறிய

கோயில் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் - 3 மாத கால ஊதியம் வழங்கவில்லை என புகார்

தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இரவு நேர பாதுகாவலர்களாக 64 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு மூன்று மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் கோயில் பாதுகாவலர் நலச் சங்கத்தின் உபத் தலைவர் ஆர்.பாலு, செயலாளர் ஆர்.மனோகரன், பொருளாளர் எஸ்.விஜயேந்திரன், செய்தி தொடர்பாளர் ஜெயபாலன் மற்றும் பலர்,  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சம்பள நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இரவு நேர பாதுகாவலர்களாக 64 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கோயில்களில் பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை நாங்கள் பாதுகாத்திடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் எங்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை மூன்று மாத காலத்துக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை.


கோயில் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் - 3 மாத கால ஊதியம் வழங்கவில்லை என புகார்

நாங்கள் எங்களது சொந்த செலவில் தினமும், பல கிலோமீட்டர் பயணம் செய்து, எங்களது வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு செலவு செய்து கோயிலில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் பலருக்கு ஓய்வூதியம் இல்லாமலும் உள்ளனர். இதனால் பெரிதும் பொருளாதார ரீதியில் சிரமப்படுவதால், எங்களுக்குரிய மூன்று மாதகால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். சம்பள நிலுவை தொகை வழங்காததால், முன்னாள் ராணுவத்தினர் பலரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். அருகில் உள்ளவர்கள், நண்பர்களிடம் கடன்களை பெற்று அன்றாட செலவுகளை நடத்துகின்றனர். சிலரது குழந்தைகள் கல்லுாரியில் படிப்பதால்,  பணம் கட்ட முடியாமல், வேதனைக்குள்ளாகி உள்ளனர்.


கோயில் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவத்தினர் - 3 மாத கால ஊதியம் வழங்கவில்லை என புகார்

இரவு நேரத்தில் எங்களது உயிரை பற்றி கவலைப்படாமல், வீட்டிலுள்ளவர்களை பற்றி சிந்திக்காமல், கோயில்களையும், அதிலுள்ள மதிக்க முடியாத சிலைகளையும் துாங்காமல் உடலை வருத்தி, மேற்கொண்டுள்ள பணியினை கடமையை கண்ணும் கருத்தமாக  பாதுகாத்து வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு சம்பள தொகையை வழங்காமல் அலைகழிப்பது எங்களை அவமானப்படுத்தவதாகும். நாட்டை பாதுகாத்த முன்னாள் ராணுவத்தினர்கள், ஒய்வு பெற்ற பிறகு எங்களால் இந்நாட்டிற்கு எங்களது பணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்று இரவு நேர பணிக்கு வந்தால், எங்களை மதிக்காமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளது. எனவே, நாட்டுக்காக பாடுபட்டு விட்டு, ஒய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து பணியில் இருக்கும் முன்னாள் ராணுவத்தினரை மதிக்க வேண்டும் என்றால், உடனடியாக மூன்று மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றனர்.முன்னதாக தஞ்சாவூர் முன்னாள் ராணுவத்தினர் படை வீரர் அலுவலகத்தில், நலச்சங்கத்தினர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget