தஞ்சையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூரில் நாளை 5ம் தேதி வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாளை 5ம் தேதி வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெறும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வல்லம் ரோடு பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி தஞ்சை புறநகர் பகுதி அலுவலகங்களை சார்ந்த மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஏதேனும் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.





















