மேலும் அறிய

தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

’’செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக இந்நிதியைத் திரட்ட வேண்டி பெற்றோர்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் முயற்சி’’

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகேயுள்ள சிராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ரெப்கோ வங்கியில் பணிபுரியும் ஜெகதீஷ்-எழிலரசி தம்பதியரின் 22 மாத குழந்தை பாரதி முதுகுத்தண்டுவட தசைநார்ச் சிதைவு என்கிற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனால் பாரதியின் உடல் உறுப்புகள் செயல்பாடு ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நோயிலிருந்து பாரதி குணமடைய இரண்டு வயதுக்குள்ளாக ஜோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஊசி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதன் விலை 16 கோடி. இந்த குழந்தையைக் உயிருடன் காப்பாற்ற வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக இந்நிதியைத் திரட்ட வேண்டி அவர்களது பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை நண்பர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.


தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

இந்நிலையில் பாரதிக்கு உதவுகிற வகையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்,  மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிதி திரட்டும் பணியை செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும் தஞ்சாவூர் நகரம் முழுவதும் குழந்தை பாரதிக்காக பல்வேறு இடங்களில் நிதி சேகரிக்கும் பணியை ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் காளையார் சரவணன் தலைமையில் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இதுவரை 7 கோடி மட்டுமே சேர்ந்துள்ளது. குறைந்த காலத்தில் மேலும் அதிக நிதி தேவைப்படுவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் தஞ்சாவூர் பனகல் கட்டடம் எதிரில்  மனித சங்கிலி நிகழ்ச்சியை நடத்தி நிதி உதவி கோரினர்.


தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

 இதே போல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அன்பு சுவர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பாரதிகாக நிதி திரட்டினர்.  ஊசி செலுத்துவதற்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டமின்று , தமிழகம் முழுவதும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பெண் குழந்தை பாரதிக்காக நிதியை திரட்டி வருகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலீவர் கூறுகையில், பாரதிக்கு தேவையான நிதி பெறுவதற்காக பல்வேறு அமைப்புகள் போர்கால அடிப்படையில் நிதியை திரட்டி வருகின்றனர். நிதி திரட்ட முடிவு செய்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் வங்கியில் கணக்கு திறந்துள்ளோம். அக்குடும்பம் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களால் அவ்வளவு நிதி திரட்ட முடியாது. அதற்காக தான் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வருகின்றோம். பெண் குழந்தை பாரதி  உயிருடன் நலமுடன் வாழவேண்டும் என்றார்.


தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

இது குறித்து தந்தை ஜெகதீஸ்  கூறுகையில், இயற்கையாக புரோட்டீன் சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்தின் விலை 16 கோடி, அதை இறக்குமதி வரி 6 கோடி என 22 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது. தற்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் 7 கோடி  தான் கிடைத்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் ஊசி போடவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களது குழந்தை காப்பாற்ற வேண்டும் என நம்பிக்கையில் இருந்து வருகின்றோம்.  தமிழக அரசு, மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவிகள் செய்து தரவேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget