மேலும் அறிய

பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

‛‛சம்பந்தப்பட்ட செவிலியர் மனஉளைச்சலில் தற்போது வேலைக்கு வரவில்லை. வந்தவுடன், விசாரணை நடத்தப்பட்டு, தவறு இருந்தால், அவர் மீது நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என டீன் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டானதாக வெளியான தகவல் தொடர்பாக உரிய விசாரணைக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே காட்டூர்  கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(34), விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் பிரியதர்ஷினி(20), என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு 9-வது மாதத்தில், கடந்த 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே, தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதையடுத்து, குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் (வென்பிளான்) வழியாக, குழந்தைக்கு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கை அசையாமல் இருக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.  இந்நிலையில், குழந்தை சற்று ஆரோக்கியமாக இருப்பதால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்வதற்காக, குழந்தையின் கையில் உள்ள வென்பிளானை அகற்றி எடுப்பதற்காக, செவிலியர் ஒருவர் கத்தரிக்கோலால் நறுக்கும்போது, குழந்தையின் கட்டை விரல் துண்டாகியதாக கூறப்படுகிறது.  இதனால் குழந்தையின் கையில் இருந்து ரத்தம் வந்ததை கண்ட தாய் பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, செவிலியர், டாக்டர்களுக்கு தகவல் கொடுத்து, குழந்தையின் கையில் மீண்டும் தையல் போட்டுள்ளனர். 

பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து குழந்தையின் தந்தை கணேசன் கூறியதாவது: எனது குழந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு வருங்காலத்தில் யாருக்கும் நிகழக்கூடாது. சம்மந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் நிலை குறித்து தெளிவாக டாக்டர்கள் கூற வேண்டும் என்றார்.
 
இதுதொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி முதல்வர் வ.ரவிக்குமார் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: குழந்தைக்கு ஏற்றப்பட்ட டிரிப் லையனை பிரிக்கும் போது, குழந்தை கையை அசைத்து இருக்கலாம். அதனால், பெருவிரலின் நுனிபாகம் துண்டாகிவிட்டது. உடனே குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், தையல் போட்டு இருக்கிறார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செவிலியர் மனஉளைச்சலில் தற்போது வேலைக்கு வரவில்லை. வந்தவுடன், விசாரணை நடத்தப்பட்டு, தவறு இருந்தால், அவர் மீது நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியரின் அலட்சிய போக்கா என்பது விசாரணைக்கு பின் தெரிய வரும். சின்ன குழந்தை என்பதால் விரல் இணைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது. எலும்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
இந்த விவகாரம் நேற்று தமிழ்நாட்டில் பேரதிர்வை ஏற்படுத்திய நிலையில், பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
Hyundai Verna Facelift Vs Old Verna: அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
Trump Thank Reliance: ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Embed widget