மேலும் அறிய

பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

‛‛சம்பந்தப்பட்ட செவிலியர் மனஉளைச்சலில் தற்போது வேலைக்கு வரவில்லை. வந்தவுடன், விசாரணை நடத்தப்பட்டு, தவறு இருந்தால், அவர் மீது நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என டீன் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டானதாக வெளியான தகவல் தொடர்பாக உரிய விசாரணைக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே காட்டூர்  கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(34), விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் பிரியதர்ஷினி(20), என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு 9-வது மாதத்தில், கடந்த 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே, தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதையடுத்து, குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் (வென்பிளான்) வழியாக, குழந்தைக்கு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கை அசையாமல் இருக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.  இந்நிலையில், குழந்தை சற்று ஆரோக்கியமாக இருப்பதால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்வதற்காக, குழந்தையின் கையில் உள்ள வென்பிளானை அகற்றி எடுப்பதற்காக, செவிலியர் ஒருவர் கத்தரிக்கோலால் நறுக்கும்போது, குழந்தையின் கட்டை விரல் துண்டாகியதாக கூறப்படுகிறது.  இதனால் குழந்தையின் கையில் இருந்து ரத்தம் வந்ததை கண்ட தாய் பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, செவிலியர், டாக்டர்களுக்கு தகவல் கொடுத்து, குழந்தையின் கையில் மீண்டும் தையல் போட்டுள்ளனர். 

பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து குழந்தையின் தந்தை கணேசன் கூறியதாவது: எனது குழந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு வருங்காலத்தில் யாருக்கும் நிகழக்கூடாது. சம்மந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் நிலை குறித்து தெளிவாக டாக்டர்கள் கூற வேண்டும் என்றார்.
 
இதுதொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி முதல்வர் வ.ரவிக்குமார் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: குழந்தைக்கு ஏற்றப்பட்ட டிரிப் லையனை பிரிக்கும் போது, குழந்தை கையை அசைத்து இருக்கலாம். அதனால், பெருவிரலின் நுனிபாகம் துண்டாகிவிட்டது. உடனே குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், தையல் போட்டு இருக்கிறார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செவிலியர் மனஉளைச்சலில் தற்போது வேலைக்கு வரவில்லை. வந்தவுடன், விசாரணை நடத்தப்பட்டு, தவறு இருந்தால், அவர் மீது நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியரின் அலட்சிய போக்கா என்பது விசாரணைக்கு பின் தெரிய வரும். சின்ன குழந்தை என்பதால் விரல் இணைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது. எலும்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
இந்த விவகாரம் நேற்று தமிழ்நாட்டில் பேரதிர்வை ஏற்படுத்திய நிலையில், பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!
RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சை தேர்வு செய்தது! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சை தேர்வு செய்தது! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில்  கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!
RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சை தேர்வு செய்தது! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சை தேர்வு செய்தது! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில்  கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
Actor Govinda: அரசியலில் 2ஆவது இன்னிங்ஸ்.. ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!
ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
Family Star Trailer: குடும்பம் குட்டியுடன்  ஃபேமிலி பாயாக மாறிய விஜய் தேவரகொண்டா!  ஃபேமிலி ட்ரெய்லர் இதோ!
Family Star Trailer: குடும்பம் குட்டியுடன் ஃபேமிலி பாயாக மாறிய விஜய் தேவரகொண்டா! ஃபேமிலி ட்ரெய்லர் இதோ!
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
Embed widget