மேலும் அறிய

தொடர் விடுமுறை... தஞ்சையை குலுங்க விட்ட சுற்றுலாப்பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் திணறல்

பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்தனர். மேலும், பெரியகோயில் எதிரே உள்ள ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளிட்டவற்றிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

தஞ்சாவூர்: தொடர் விடுமுறையால் தஞ்சாவூரே குலுங்கி விட்டது என்றுதான் சொல்லணும். அட ஆமாங்க உண்மைதான். தஞ்சாவூர் பெரிய கோயிலில் விடுமுறை நாட்கள் காரணமாக பக்தர்கள் கூட்டம் கடந்த 3 நாட்களாவே மிக அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 30ம் தேதி பிற்பகல் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதேபோல, தஞ்சாவூர் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்தனர். மேலும், பெரியகோயில் எதிரே உள்ள ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளிட்டவற்றிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.


தொடர் விடுமுறை... தஞ்சையை குலுங்க விட்ட சுற்றுலாப்பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் திணறல்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த தஞ்சாவூர்

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கார், வேன், பேருந்துகளில் வருவதால் பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் வாகனங்களால் நிரம்பியது. இதனால், திலகர் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதிமன்றச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பழைய நீதிமன்ற சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பெரிய கோயிலுக்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. காவலர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதன் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் பல நிமிடங்கள் காத்திருந்துதான் நகர்ந்தன. இதனிடையே, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி அனுப்புவதில் போக்குவரத்துக் காவலர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இன்றும் பெரிய கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை

இதேபோல, திலகர் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதிமன்றச் சாலையிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. நாளை வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால் இன்று நேற்றைய நாளை விட இன்று பெரிய கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. கோயிலில் எந்த பக்கம் பார்த்தாலும் மக்களின் தலையாகவே இருந்தது. வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து திரும்பினர் பக்தர்கள்.

வெளி மாநில சுற்றுலாப்பயணிகளும் குவிந்தனர்

தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என பிற மாவட்ட சுற்றுலாப்பயணிகள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெரிய கோயிலுக்கு வந்திருந்தனர். இதேபோல் ராஜாளி பூங்காவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மேம்பாலம், மருத்துவக்கல்லூரி சாலை, ஆற்றுப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்புபவர்கள் ஒரே நேரத்தில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் ஏராளமான கூட்டம் தென்பட்டது, முக்கியமாக திருச்சி செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல் மதுரை, புதுக்கோட்டை பஸ்களிலும் மக்கள் நெரிசல் அதிகம் காணப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget