மேலும் அறிய

தஞ்சை அருகே இரண்டு லாரி நேருக்கு நேர் மோதல் - 2 பேர் உயிரிழப்பு

பைக், கார்களில் வருபவர்கள் எதிரில் வேகமாக வரும் லாரிகளை கண்டு அச்சப்பட்டு சாலையை விட்டு கீழே இறங்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரியும், சிமெண்ட் லாரியும் நேருக்கு மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் ப.ஆறுமுகம் (45). மினி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர். இவரது லாரியில் அதே பகுதியை சேர்ந்த த.தமிழ்ச்செல்வன் (50) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, ஆறுமுகமும், தமிழ்செல்வனும், தஞ்சாவூரில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில், காய்கறியை இறக்கி விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 11:30 மணிக்கு கண்டியூர் அருகே வளைவில் திரும்பும் போது, அரியலுாரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஆறுமுகத்தின் மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் மினி லாரி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறுமுகம், தமிழ்செல்வன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிணெ்ட் லாரி டிவைரான புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த சுதாகர் (42) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், திருவையாறு - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் லாரிகள் மிக வேகமாக செல்கின்றன. இதேபோல் அரியலுார் பகுதியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி திருவையாறு பகுதிகளில் சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. மேலும் பைக், கார்களில் வருபவர்கள் எதிரில் வேகமாக வரும் லாரிகளை கண்டு அச்சப்பட்டு சாலையை விட்டு கீழே இறங்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இப்பகுதியில் செல்லும் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் பிரகாசமாக விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு வெகு வேகமாக செல்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் அதிக ஒளியால் தடுமாறி சாலையோரத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே இவ்வாறு வேகமாக வரும் லாரிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சிமெண்ட் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கிறோம். போலீசார் இல்லாத நேரத்தில் மிக வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தும் செயலாக மாறி விடுகிறது. பலமுறை தெரிவித்தும் இவ்வாறே செய்கின்றனர். வேகத்தை குறைக்க பேரிகார்டு வைத்தாலும் பல நேரங்கில் அதையும் இடித்து தள்ளிவிட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
Embed widget