மேலும் அறிய

தஞ்சை அருகே இரண்டு லாரி நேருக்கு நேர் மோதல் - 2 பேர் உயிரிழப்பு

பைக், கார்களில் வருபவர்கள் எதிரில் வேகமாக வரும் லாரிகளை கண்டு அச்சப்பட்டு சாலையை விட்டு கீழே இறங்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரியும், சிமெண்ட் லாரியும் நேருக்கு மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் ப.ஆறுமுகம் (45). மினி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர். இவரது லாரியில் அதே பகுதியை சேர்ந்த த.தமிழ்ச்செல்வன் (50) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, ஆறுமுகமும், தமிழ்செல்வனும், தஞ்சாவூரில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில், காய்கறியை இறக்கி விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 11:30 மணிக்கு கண்டியூர் அருகே வளைவில் திரும்பும் போது, அரியலுாரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஆறுமுகத்தின் மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் மினி லாரி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறுமுகம், தமிழ்செல்வன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிணெ்ட் லாரி டிவைரான புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த சுதாகர் (42) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், திருவையாறு - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் லாரிகள் மிக வேகமாக செல்கின்றன. இதேபோல் அரியலுார் பகுதியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி திருவையாறு பகுதிகளில் சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. மேலும் பைக், கார்களில் வருபவர்கள் எதிரில் வேகமாக வரும் லாரிகளை கண்டு அச்சப்பட்டு சாலையை விட்டு கீழே இறங்குவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இப்பகுதியில் செல்லும் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் பிரகாசமாக விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு வெகு வேகமாக செல்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் அதிக ஒளியால் தடுமாறி சாலையோரத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே இவ்வாறு வேகமாக வரும் லாரிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சிமெண்ட் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கிறோம். போலீசார் இல்லாத நேரத்தில் மிக வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தும் செயலாக மாறி விடுகிறது. பலமுறை தெரிவித்தும் இவ்வாறே செய்கின்றனர். வேகத்தை குறைக்க பேரிகார்டு வைத்தாலும் பல நேரங்கில் அதையும் இடித்து தள்ளிவிட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Embed widget