மேலும் அறிய

தஞ்சையில் சிறுமியிடம் முறைகேடாக நடந்த 2 பேர் போக்சோவில் கைது

கடன் வாங்கியவர் தனது 17 வயது மகளை மன்னார்குடிக்கு அனுப்பியுள்ளார். மன்னார்குடிக்கு வந்த பெண்ணை முத்துப்பாண்டியன் தனியாக அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: தனியார் நிதி  நிறுவனத்தில் கடன் வாங்கியவரின் 17 வயது மகளை கடத்தி முறைகேடாக நடந்து கொண்ட 2 வாலிபர்களை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் பகுதியில், 17 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு அழுது கொண்டிருந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அதிராம்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸாருக்கு தகவல் அளித்து, பட்டுக்கோட்டை பகுதிக்கு சிறுமியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

மேலும் அந்த சிறுமியின் தந்தை மன்னார்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருந்தார். கடன் தொடர்பாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சாத்தனூரைச்  சேர்ந்த முத்துப்பாண்டியன் (28), சிறுமியின் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசும்போது, அவரது மகள் போனை எடுத்து பேசுவது வழக்கம்.

இதில் முத்துப்பாண்டியனுக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முத்துப்பாண்டியன் கடன் வாங்கிய சிறுமியின் தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது மகள் கூறிய நிலையில், நிறுவனத்துக்கு வந்து தகவலை தெரிவிக்குமாறு முத்துப்பாண்டியன் கூறியுள்ளார்.
 
இதனால் கடன் வாங்கியவர் தனது 17 வயது மகளை மன்னார்குடிக்கு அனுப்பியுள்ளார். மன்னார்குடிக்கு வந்த பெண்ணை முத்துப்பாண்டியன் தனியாக அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய அந்த சிறுமியும் முத்துப்பாண்டி அழைத்ததால் அவருடன் பைக்கில் ஏறி உள்ளார்.

அப்போது முத்து பாண்டியன் நண்பர் தவசீலன் (25) வேகமாக வந்து பைக்கில் சிறுமியின் பின்னால் அமர்ந்து கடத்தி வந்துள்ளனர். பின்னர் ராஜாமடம் அக்னிஆறு பகுதியில் அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்டனர். பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுமியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். தொடர்ந்து அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர்  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் முத்துப்பாண்டி, தவசீலன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?
Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Embed widget