மேலும் அறிய

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

’’பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை’’

வட கிழக்கு பருவ மழையை தொடங்கியதையடுத்த, தஞ்சாவூர் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை முதல் மீண்டும் பெய்த தொடர் மழை பெய்ததால், அம்பது மேல்நகர கிராமத்திலுள்ள கோணக்கடுங்கலாறு கரை உடைந்து சுமார் 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 17,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை குறைந்ததை தொடர்ந்து, வயலில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. வடிகால்  வாய்க்கால் தண்ணீர் வடியாத பிரச்னையாலும், அவ்வப்போது மழை பெய்வதாலும் 9,245 ஏக்கரில் தேங்கிய தண்ணீர் வடிவதில் தாமதமாகிறது. தற்போது இப்பயிர்கள் அழுகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மீண்டும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களிலும் பலத்த மழை பெய்ததால், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா பருவ இளம் பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல, திருவையாறு வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் தஞ்சாவூர் அருகே வரகூர் அம்பதுமேல் நகரம் இடையே கோணக்கடுங்கலாறில் தென் கரையில் சுமார் 20 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, வரகூர், நடுக்காவேரி, அந்தலி, குழிமாத்தூர் ஆகிய 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இதில், சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட இளம் நாற்றுக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.


தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

அகரப்பேட்டையில் கிராமத்திலுள்ள வெண்ணாற்றிலிருந்து,  பிரியும் கோணக்கடுங்கலாறு நாகத்தி கிராமத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. இதன் மூலம் ஏறக்குறைய 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், அம்பதுமேல் நகரம்- அந்தலி கிராமங்களை இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, தண்ணீர் செல்ல முடியாமல்,  தரைப்பாலம் மூடப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைப்பட்டு வரகூர்- ஐம்பது மேல் நகரம் இடையே உடைப்பு ஏற்பட்டு, சம்பா பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகி கடல் காட்சியளித்தது.


தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

இது குறித்து தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் சுமார் 50 விவசாயிகள் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு பாதி பேர் செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தரை பாலத்தில் ஏற்படும் அடைப்பால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இத் தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இழப்பீடும் வழங்க என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget