மேலும் அறிய

"தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்" தஞ்சை மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தஞ்சாவூர்: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தண்ணீர் தேவை மிக முக்கியமானது

கோடை காலத்தில் தண்ணீர் முக்கிய தேவையான ஒன்றாகும். ஒரு பொதுவான மற்றும் அடிப்படையான விஷயம் வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது. அதாவது நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து:

நாள் ஒன்றுக்கு ஒருவர் இரண்டு அல்லது மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லை. அவரவரின் உடல் எடையைப் பொறுத்து தண்ணீர் அருந்த வேண்டும். தாகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு நாம் நீர் அருந்த கூடாது. இது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல. பொதுவாகவே ஒருவருக்கு அவரின் எடையை பொறுத்து நீரின் தேவை இருக்கும். கோடை காலத்தில் தாகம் இருக்கும் ஆனால் குளிர்காலத்தில் அந்த தாகமும் இருக்காது. தாகம் எடுத்தால்தான் தண்ணீர் அருந்த வேண்டும் என்றில்லை.

அதேபோல சிலர் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ், டீ, காபி, சூப்,போன்ற பானங்களை அருந்தினால் நீர்ச்சத்தை அதிகப்படுத்தலாம் என நினைப்பார்கள். அது தவறான ஒன்று. நீர்ச்சத்தை சரியாக பேணுவதற்கு நீரை தவிர்த்து வேறொரு அற்புத பானம் இல்லை. போதுமான தண்ணீர் குடித்துவிட்டு, கூடுதலாக மோர், எலுமிச்சை பழச்சாறு, பழங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். அதிலேயும் சர்க்கரை அதிகமாக இருந்தால் அது அதிக பலனைக் கொடுக்காது. எனவே தண்ணீரை கொண்டே நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்து விடலாம்.


தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

இப்படி முக்கிய தேவையான ஒன்றாக அதுவும் கோடைகாலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையானது என்றால் அது குடிநீர்தான். அதேபோல் தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. தஞ்சை மாநகராட்சியில் தண்ணீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கவனத்துடன் தண்ணீரை செலவழியுங்கள்

பாத்திரங்களை கழுவும் போது குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி கழுவலாம். பல் துலக்கும்போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல், ஒரு வாளியில் நீரை நிரப்பி சிறுக சிறுக பயன்படுத்த வேண்டும். குளிக்கும்போது 'ஷவர்' பயன்படுத்தாமல் வாளியில் நீரை நிரப்பி குளிக்கலாம். துணி துவைக்கும் எந்திரங்களில் (வாஷிங் மெஷின்) அன்றாடம் துணிகளை துவைக்கும் கழுவி விடுவதற்கு முன்னர் போது கூடுதல் நீர் செலவாகும்.

அதனால், ஒரே முறையாக எல்லா துணிகளையும் துவைத்து நீரை சிக்கனப்படுத்த வேண்டும். துணி துவைத்த பிறகு மீதம் இருக்கும் நீரை வீணாக்காமல் கழிப்பறையில் ஊற்றலாம். தண்ணீர் குழாய்களை நன்றாக மூட வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் கசிவு இருந்தால் உடனே பழுது நீக்க வேண்டும்.

வாகனங்களை தண்ணீர் குழாய் மூலம் கழுவாமல் ஈரத்துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இப்படிப் பல வழிகளில் நீரைச் சேமித்தால் அது நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget