மேலும் அறிய

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முழுமையான பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதி

கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் போலீசார் அவர்களுக்கு என்ன காரணத்திற்காக சோதனைகள் நடக்கிறது என்பதை தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை ஒட்டி வாசலிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அனைத்து தரப்பினரையும் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
 
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வருகிறது. இங்கு தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் தெரிவித்து தீர்வு பெற்று வருகின்றனர். மனு கொடுக்க வரும் பொதுமக்களில் சிலர், தங்களின் பிரச்னையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்காக மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் வந்து அதிகாரிகள் முன்னிலையில் தன் மீது ஊற்றி கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் மனு கொடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முழுமையான பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதி

குறிப்பாக தண்ணீர் பாட்டில்களை கூட்ட அறைக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தீயணைப்பு வீரர்களும் கூட்ட அறை முன்பு தயார் நிலையில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் ஒரு சிலர், மண்எண்ணெய், பெட்ரோல் பாட்டில்களுடன் டிமிக்கி கொடுத்து விட்டு உள்ளே நுழைந்து விடுகின்றனர். இது போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில், இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.

இதற்காக காலை முதல் ஏடிஎஸ்பி முத்தமிழ்செல்வன் மேற்பார்வையில், வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சிசாரா உட்பட ஏராளமாக போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களின் பைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில்களில் உள்ளது தண்ணீர்தானா என்பதும் குறித்து போலீசார் பரிசோதித்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டு முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

போலீசாரின் இந்த பரிசோதனை நடவடிக்கைக்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் தப்ப வில்லை. அவர்களின் அடையாள அட்டையை வாங்கி பார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் போலீசார் அவர்களுக்கு என்ன காரணத்திற்காக சோதனைகள் நடக்கிறது என்பதை தெரிவித்தனர். இவ்வாறு பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முழுமையான பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதி

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கலெக்டர் அலுவலக முகப்பு பகுதி, மாவட்ட காவல் அலுவலகம் செல்லும் பகுதி என மக்கள் எவ்விதத்திலும் மண்எண்ணெய், பெட்ரோல் பாட்டில்களுடன் உள்ளே வராமல் தடுக்க தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. பொதுமக்கள் தங்களின் மனுக்கள் மீது உடனே தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மண்எண்ணெய், பெட்ரோல் ஆகியவற்றை எடுத்து வந்து அதிகாரிகள் முன்பு ஊற்றிக் கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget