மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை - தஞ்சை மேயர்

தஞ்சாவூர் மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சண். ராமநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பழைய பஸ் ஸ்டாண்ட் புதிதாக கட்டப்பட்டது. மேலும் திருவையாறு பஸ் ஸ்டாண்டாக இருந்த இடம் வணிக வளாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பழைய மாநகராட்சி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக கட்டும் பணி நடந்து வருகிறது. சாலைகள் மேம்பாடு உட்பட பல்வேறு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 2023, மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, இப்பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் திட்டம் இரு மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். சிவகங்கை பூங்காவில் புனரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், இரு மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் போக்குவரத்து சிக்னல் பிரச்னை தொடர்பாக இரு நாள்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலக மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.


ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை - தஞ்சை மேயர்


மாநகரில் தற்போதுள்ள குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 20.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது. இப்போது, பொலிவுறு நகரத் திட்டத்தின் மூலம் மேலும் 18 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் இரண்டாவது திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், கொள்ளிடம் நீரேற்று நிலையத்திலிருந்து தஞ்சாவூருக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பள்ளியக்ரஹாரம் நீரேற்று நிலையத்திலிருந்து மாநகருக்கு இணைப்புக் கொடுக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி முடிவடைந்தவுடன் பழைய நகரப் பகுதியான 25 வார்டுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும்.

இந்த மாநகராட்சியுடன் 2024 ஆம் ஆண்டில் சுற்றியுள்ள 13 ஊராட்சிகள் சேர்க்கப்படவுள்ளன. இதையும் கருத்தில் கொண்டு மேலும் 18 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் விதமாக மூன்றாவது திட்டப் பணியும் கொள்ளிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரிவாக்கப் பகுதிகளுக்கும் குடிநீர் பிரச்னை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 190 கோடி மதிப்பில் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget