மேலும் அறிய

21 மாத நிலுவை ஓய்வூதிய தொகையை வழங்குங்கள்... தஞ்சை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்..!

திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 4வது மாநாடு நடந்தது.

21 மாத கால நிலுவை ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடந்த தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 4வது, மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இதையொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஓய்வூதியர்கள் உரிமைப் பேரணி வட்டப் பொருளாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. பின்னர் சங்கக் கொடியேற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர்  கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பூதலூர் வட்டச் செயலாளர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தொடக்கவுரையாற்றினார்.
 

21 மாத நிலுவை ஓய்வூதிய தொகையை வழங்குங்கள்... தஞ்சை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்..!


ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் இராஜகோபாலன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ஜி.பூபதி நிதிநிலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர்  கோதண்டபாணி, அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு  மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர்  பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: "மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கியுள்ளது போல, தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் ஜனவரி 2022 முதல் 3 விழுக்காடு அகவிலைப்படியை முன்தேதியிட்டு ரொக்கமாக உடன் வழங்க வேண்டும்.  ஓய்வூதியர்களின் மஸ்டரிங் வேலையை 20 விழுக்காடு மட்டுமே அரசு கருவூலம் செய்வது என்பதும், மீதி 80 விழுக்காட்டை அஞ்சல் துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள், சேவை நிறுவனங்களிடம் விட்டு விடுவது ஆள் குறைப்பு நடவடிக்கை ஆகும். எனவே, மஸ்டரிங் முறை முழுவதையும் கருவூலமே எடுத்துச் செய்ய வேண்டும்.
 
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு, 70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.  பூதலூரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தவுடன் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக ரூ.25 ஆயிரத்தை அன்றே வழங்கவும், அதனை குடும்பப் பாதுகாப்பு நிதியில் ஈடு செய்யவும் உரிய அரசாணை வழங்க வேண்டும்.
 
21 மாத நிலுவை ஓய்வூதிய தொகையை வழங்குங்கள்... தஞ்சை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்..!

21 மாத கால நிலுவை ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். ரயில் பயணங்களில் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் கட்டணச் சலுகை இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

தொடர்ந்து மாநாட்டில் மாவட்டத் தலைவராக கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளராக தமிழ்மணி, மாவட்டப் பொருளாளராக கோவிந்தராஜ், மாவட்டத் துணைத் தலைவர்களாக பூபதி, பழ.அன்புமணி, பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர்களாக பாலசுப்பிரமணியன், வெங்கடேசன், பிச்சைமுத்து மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், தணிக்கையாளர்கள் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலச் செயலாளர்  இரா.மனோகரன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget