மேலும் அறிய

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய விலை வேண்டும்; தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக)மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

“புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தினாங்க. ஆனால் விலை மதிப்பை குறைச்சு போட்டு இருக்காங்க. இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியைச் சுற்றி, மூன்றாம் கட்டப் புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டும் மதிப்பை விட குறைந்த அளவிலான தொகையே நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனால், கொற்கை மற்றும் அண்ணலக்ரஹாரம் ஊராட்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

இதையடுத்து, சங்கத்தின் மாநிலச் செயலர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாசிலாமணி நிருபர்களிடம் தெரிவித்ததாவது: கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம், மேல கொற்கை கிராமங்களில் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு மறு வாழ்க்கை நடத்துவதற்கான உதவித்தொகை கூட கொடுக்கப்படவில்லை. ஒரு சதுர அடி ரூ.33க்கும், ஒரு குழி ரூ.440 விலைக்கும் எடுக்கப்படுகிறது. ஆழ்குழாய் நீர் உள்ள இடம் இது. கும்பகோணம் நகரத்தின் அருகிலுள்ள இடத்தை இந்த விலைக்கு எடுத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

 


கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய விலை வேண்டும்;  தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி, இந்த நிலம் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 2013 ஆம் ஆண்டு சட்டப்படி எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டப்படிதான் இந்த நிலத்தை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பக்கத்திலுள்ள நிலங்கள் சதுர அடி ரூ. 500, ரூ. 800 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளிடம் அரசு சதுர அடி ரூ. 33க்கு வாங்குகிறது. எனவே, அரசு மறு ஆய்வு செய்து, மத்திய அரசு சட்டப்படி என்ன விலை கொடுக்கப்படுகிறதோ, அதேபோல மாநில அரசுத் திட்டத்துக்கும் கூடுதல் தொகையாக குறைந்தபட்ச சதுர அடிக்கு ரூ. 500 விலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் போது ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் என்றால் இதுபோல் சாலை அகலப்படுத்தல் உட்பட பல பணிகளுக்கு நிலம் கையப்படுத்தப்படும் போது அதற்குரிய உரிய விலை அளிக்காவிடில் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைக்க வேண்டும் என்றாலே குறைந்தது ஒரு லட்சம் ரூபாயாவது தேவைப்படும். ஆனால் விவசாயிகளிடம் இருந்து அரசு கையக்கப்படுத்தும் நிலத்திற்கு மிகவும் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் சாமு. தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், துணைச் செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget