மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை... ஆட்டுக்கிடை அமைத்தவர்கள் பரிதாப நிலை

கோடை மழையின் காரணமாக கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கொட்டி தீர்த்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முக்கியமாக கடந்த 10 நாட்களாக இருந்து வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவானது. இருப்பினும் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் மட்டும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று காலை பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதனால் இளநீர், பதநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி காலை வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு வருமாறு: பேராவூரணி 63 மி.மீட்டர், ஒரத்தநாடு 54, பூதலூர் 51, வல்லம் 45, மதுக்கூர் 45, வெட்டிக்காடு 44, அய்யம்பேட்டை 38, திருவையாறு 31, பாபநாசம் 29, அணைக்கரை 20, திருக்காட்டுப்பள்ளி 19, தஞ்சாவூர் 19,  கல்லணை 17, குருங்குளம் 12, நெய்வாசல் 12,  அதிராம்பட்டினம் 11, கும்பகோணம் 8, திருவிடைமருதூர் 6, மஞ்சளாறு 6 என மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் அறுவடை முடிந்த வயல்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஆட்டுக்கிடை போட்டுள்ளனர். விளைநிலங்களின் மண் வளத்தை அதிகரிக்கவும், இயற்கை உரம் மூலம் மகசூலை உயர்த்தவும் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்தல் ஒரு சிறந்த பாரம்பரிய முறையாகும். ஆடுகள் இரவு நேரத்தில் வயல்களில் தங்கி, புழுக்கை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம், நிலத்திற்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன. பொதுவாக செம்மறி ஆடுகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டு உரிமையாளர்கள் வயல்வெளிகளில் சிறு குடில் அமைத்து தங்கி, ஆடுகளைக் காவல் காப்பார்கள். இந்த முறையால் மண் வளத்தைப் பேணிக்காத்து, கூடுதல் மகசூல் பெற உதவுகிறது.

அவ்வாறு ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் இந்த கனமழையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இடி, மின்னல் ஆகியவற்றால் ஆடுகள் மிரண்டு பட்டிக்குள் ஓடியபடியே இருந்ததால் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் அவதியடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Platina on EMI: டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
Long Range Electric Bikes: ஒரு தடவை சார்ஜ் போட்டுட்டு போய்ட்டே இருக்கணுமா.? இந்தாங்க, அதிக ரேஞ்ச் கொடுக்கும் EV பைக்குகள் லிஸ்ட்
ஒரு தடவை சார்ஜ் போட்டுட்டு போய்ட்டே இருக்கணுமா.? இந்தாங்க, அதிக ரேஞ்ச் கொடுக்கும் EV பைக்குகள் லிஸ்ட்
Best 125cc Bikes in India: சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
Embed widget