மேலும் அறிய

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 விதி மீறல்; கடலோர கிராமங்களில் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோர காவல் துறை அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, மடவாமேடு, கொட்டாய் மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 ல் உள்ள விதிகாளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என  பல்லாயிரம் மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 விதி மீறல்; கடலோர கிராமங்களில் ஆய்வு.

மூன்றாவது நாளான நேற்று தங்களது குடியுரிமை அடையாளங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை  வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அப்போது பேசிய ஆட்சியர் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், அதேநேரம் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்  1983ல் உள்ள 21 வகையான விதிகள்  முழுமையாக அமல்படுத்தபடும் எனவும், விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததார். இதனை ஏற்ற சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்  1983ல் உள்ள 21 வகையான விதிகள்  முழுமையாக அமல்படுத்தபடும் வரை  வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.


மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 விதி மீறல்; கடலோர கிராமங்களில் ஆய்வு.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின் பேரில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்  1983ல் உள்ள 21 வகையான விதிகள்  முழுமையாக அமல்படுத்தும் நடவடிக்கையாக சட்டத்திற்கு புறம்பாக படகுகளில் பயன்படுத்தும் வலை, இஞ்சின் குறித்து  ஆய்வு பணிகளை, கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோரகாவல் துறை அடங்கிய குழுவினர் ஆய்வு தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக 40 கண் அளவிற்கு குறைவாக உள்ள வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் கரையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் மீன்பிடித்த 3 படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த 3 பேர் என மொத்தம் ஒன்பது பேர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 விதி மீறல்; கடலோர கிராமங்களில் ஆய்வு.

மேலும் தரங்கம்பாடி, சின்னங்குடி உள்ளிட்ட மீனவர் கிராமத்தில் படகுகள், படகு இஞ்சின் திறன் மற்றும் வலைகளின் தன்மை குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் வெளிமாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெளிமாநில  மீன்வளத்துறை அதிகாரிகளின் ஆய்வை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் காரணமாக மீனவ கிராமங்களில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget