மேலும் அறிய

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் இலங்கை மலையகம் 200 மாநாடு

இந்தியாவிலிருந்து இலங்கையில் 1823ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்களின் சமூக, பொருளாதார, இலக்கியப் பின்புலங்களை ஆராயும் வகையில் இலங்கை மலையகம் 200 பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் இலங்கை மலையகம் 200 மாநாடு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் இலங்கை மலையக இலக்கியம் - 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்து வந்த்து. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் இலங்கை மலையகம் 200 மாநாடு” நடைபெறவுள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன், இலங்கையின் இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் துணைத் தூதர் (கண்டி/யாழ்ப்பாணம் துணைத் தூதரகங்கள்) ஆ. நடராஜன், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

மேலும், இந்தியாவிலிருந்து இலங்கையில் 1823ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்களின் சமூக, பொருளாதார, இலக்கியப் பின்புலங்களை ஆராயும் வகையில் இலங்கை மலையகம் 200 பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

இதில், இலங்கை, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கத்தில் கோ. நடேசய்யரின் 75 ஆவது ஆண்டு நினைவுரையை இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெருமாள் சரவணகுமார், இலங்கை மலையகத் தமிழர் வாழ்வியல் குறித்து இங்கிலாந்து தமிழ் எழுத்தாளர் பி.ஏ. காதர், ஆஸ்திரேலியாவின் வழக்குரைஞர் சந்திரிகா சுப்ரமண்யன் ஆகியோர் பேசினர். மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பச்சை ரத்தம்”என்கிற ஆவணப்படம் திரையிடப்பட்டது. கருத்தரங்கத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைப் பேராசிரியர்கள் ஞா. பழனிவேலு, தெ. வெற்றிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாள் கருத்தரங்களில் இலங்கை ஊவா மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எம். செந்தில் தொண்டமான் பங்கேற்று பேசுகையில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 1823ம் ஆண்டில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கப்பலில் ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.

லண்டனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றி இலங்கையில் இறக்கிவிட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் காலரா உள்ளிட்ட நோய்களாலும், சிறுத்தை, பாம்புக் கடியாலும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களையும் ஒரே பகுதியில் குடியேற்றாமல், பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு விடுதலை கிடைத்தபோது, இலங்கைக்கும் கிடைத்தது. அதன் பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் இருந்த 100 எம்.பி.களில் 7 பேர் மலையகத் தமிழர் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்நிலையில், மலையகத் தமிழர்களைப் பிழைக்க வந்த நாடோடிகள் என்றும், இங்கு வாழத் தகுதியற்றவர்கள் எனவும் இலங்கை அரசு கூறி, குடியுரிமையை ரத்து செய்தது. இதனால், ஒரே நாளில் அனைத்து மலையகத் தமிழர்களும் அகதிகளாக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
Embed widget