மேலும் அறிய

தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

’’கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை என புகார்’’

தஞ்சாவூரில் கொரோனா தொற்று இரண்டாவது அலைக்கு பிறகு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பார் வைத்திருக்ககூடாது, மீறி பார் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது. தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைக்கு அருகில் அனுமதியின்றி பாரும், அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

தகவலையடுத்து, டாஸ்மாக் உதவி மேலாளர் சில்லரை விற்பனை வெங்கடேஸ்வரன் தலைமையில், உதவி மேலாளர் கணக்கு மகேந்திரன், ஊழியர்கள் சிவக்குமார்,தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், திடீரென சாந்தபிள்ளைகேட்-பூக்கார தெரு, பழைய பஸ் நிலையம்- மாட்டுமேஸ்திரி சந்து, மேலீஸ்கார்னர்-ரயில்வே கேட் அருகில், பஸ் நிலையம்-தனியார் லாட்ஜ் பின்புறம் ஆகிய நான்கு பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அக்கடைகளின் அருகில் பார் வைத்து, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அக்கடைகளின் அருகில் அனுமதியின்றி செயல்பட்ட பார்களை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தஞ்சாவூர், பூக்கார மண்ணையார் தெருவை சேர்ந்த செல்வக்குமார் (35), கூடலுார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜீவா(40), பாபநாசம் தாலுக்கா காவலுார் குடியானத்தெருவை சேர்ந்த மூர்த்தி (48), தஞ்சாவூர், வடக்கு வாசல்,கங்கா நகரை சேர்ந்த கோபி (46) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து,அவவ்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், பீர்களை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் நகர பகுதியான தற்காலிக பஸ் நிலையம் அருகிலுள்ள மூன்று கடைகள், கிழக்கு காவல் நிலையம் எதிர் சந்து, இரும்பு கடை அருகிலுள்ள டாஸ்மாக் கடை,பள்ளியக்கிரஹாரம் பைபாஸ் சாலையிலுள்ள இரண்டு கடைகள் என தஞ்சாவூரில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

இக்கடைகள் இருக்கும் சாலை பிரதானமானதால், அரசியல்வாதிகள் முதல் அனைத்து அதிகாரிகளும் சென்று வரும் சாலையாகும். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் சென்று வருவது வேதனையான விஷயமாகும். குறிப்பிட்ட கடைகளில், கடந்த ஆட்சியிலும், தற்போதுள்ள ஆட்சியிலும்,  கூடுதல் விலைக்கு, மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க முடியாதது கேள்வி குறியாகியுள்ளது. எனவே, டாஸ்மாக் அதிகாரிகள், தஞ்சாவூர் நகரப்பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது குறித்து, திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
Embed widget