மேலும் அறிய

தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

’’கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை என புகார்’’

தஞ்சாவூரில் கொரோனா தொற்று இரண்டாவது அலைக்கு பிறகு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பார் வைத்திருக்ககூடாது, மீறி பார் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது. தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைக்கு அருகில் அனுமதியின்றி பாரும், அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

தகவலையடுத்து, டாஸ்மாக் உதவி மேலாளர் சில்லரை விற்பனை வெங்கடேஸ்வரன் தலைமையில், உதவி மேலாளர் கணக்கு மகேந்திரன், ஊழியர்கள் சிவக்குமார்,தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், திடீரென சாந்தபிள்ளைகேட்-பூக்கார தெரு, பழைய பஸ் நிலையம்- மாட்டுமேஸ்திரி சந்து, மேலீஸ்கார்னர்-ரயில்வே கேட் அருகில், பஸ் நிலையம்-தனியார் லாட்ஜ் பின்புறம் ஆகிய நான்கு பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அக்கடைகளின் அருகில் பார் வைத்து, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அக்கடைகளின் அருகில் அனுமதியின்றி செயல்பட்ட பார்களை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தஞ்சாவூர், பூக்கார மண்ணையார் தெருவை சேர்ந்த செல்வக்குமார் (35), கூடலுார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜீவா(40), பாபநாசம் தாலுக்கா காவலுார் குடியானத்தெருவை சேர்ந்த மூர்த்தி (48), தஞ்சாவூர், வடக்கு வாசல்,கங்கா நகரை சேர்ந்த கோபி (46) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து,அவவ்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், பீர்களை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் நகர பகுதியான தற்காலிக பஸ் நிலையம் அருகிலுள்ள மூன்று கடைகள், கிழக்கு காவல் நிலையம் எதிர் சந்து, இரும்பு கடை அருகிலுள்ள டாஸ்மாக் கடை,பள்ளியக்கிரஹாரம் பைபாஸ் சாலையிலுள்ள இரண்டு கடைகள் என தஞ்சாவூரில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

இக்கடைகள் இருக்கும் சாலை பிரதானமானதால், அரசியல்வாதிகள் முதல் அனைத்து அதிகாரிகளும் சென்று வரும் சாலையாகும். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் சென்று வருவது வேதனையான விஷயமாகும். குறிப்பிட்ட கடைகளில், கடந்த ஆட்சியிலும், தற்போதுள்ள ஆட்சியிலும்,  கூடுதல் விலைக்கு, மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க முடியாதது கேள்வி குறியாகியுள்ளது. எனவே, டாஸ்மாக் அதிகாரிகள், தஞ்சாவூர் நகரப்பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது குறித்து, திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
Trump Warns Putin: “உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
“உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
Arts Science Courses: கலை, அறிவியல் படித்தும் கோடிகளில் சம்பாதிக்கலாம்! எப்படி? என்ன செய்யணும்? கல்வியாளர் பேட்டி
Arts Science Courses: கலை, அறிவியல் படித்தும் கோடிகளில் சம்பாதிக்கலாம்! எப்படி? என்ன செய்யணும்? கல்வியாளர் பேட்டி
Embed widget