மேலும் அறிய

தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

’’கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை என புகார்’’

தஞ்சாவூரில் கொரோனா தொற்று இரண்டாவது அலைக்கு பிறகு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பார் வைத்திருக்ககூடாது, மீறி பார் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது. தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைக்கு அருகில் அனுமதியின்றி பாரும், அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

தகவலையடுத்து, டாஸ்மாக் உதவி மேலாளர் சில்லரை விற்பனை வெங்கடேஸ்வரன் தலைமையில், உதவி மேலாளர் கணக்கு மகேந்திரன், ஊழியர்கள் சிவக்குமார்,தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், திடீரென சாந்தபிள்ளைகேட்-பூக்கார தெரு, பழைய பஸ் நிலையம்- மாட்டுமேஸ்திரி சந்து, மேலீஸ்கார்னர்-ரயில்வே கேட் அருகில், பஸ் நிலையம்-தனியார் லாட்ஜ் பின்புறம் ஆகிய நான்கு பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அக்கடைகளின் அருகில் பார் வைத்து, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அக்கடைகளின் அருகில் அனுமதியின்றி செயல்பட்ட பார்களை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தஞ்சாவூர், பூக்கார மண்ணையார் தெருவை சேர்ந்த செல்வக்குமார் (35), கூடலுார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜீவா(40), பாபநாசம் தாலுக்கா காவலுார் குடியானத்தெருவை சேர்ந்த மூர்த்தி (48), தஞ்சாவூர், வடக்கு வாசல்,கங்கா நகரை சேர்ந்த கோபி (46) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து,அவவ்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், பீர்களை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் நகர பகுதியான தற்காலிக பஸ் நிலையம் அருகிலுள்ள மூன்று கடைகள், கிழக்கு காவல் நிலையம் எதிர் சந்து, இரும்பு கடை அருகிலுள்ள டாஸ்மாக் கடை,பள்ளியக்கிரஹாரம் பைபாஸ் சாலையிலுள்ள இரண்டு கடைகள் என தஞ்சாவூரில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு சீல் - மதுபானங்கள் பறிமுதல், 4 பேர் கைது

இக்கடைகள் இருக்கும் சாலை பிரதானமானதால், அரசியல்வாதிகள் முதல் அனைத்து அதிகாரிகளும் சென்று வரும் சாலையாகும். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் சென்று வருவது வேதனையான விஷயமாகும். குறிப்பிட்ட கடைகளில், கடந்த ஆட்சியிலும், தற்போதுள்ள ஆட்சியிலும்,  கூடுதல் விலைக்கு, மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க முடியாதது கேள்வி குறியாகியுள்ளது. எனவே, டாஸ்மாக் அதிகாரிகள், தஞ்சாவூர் நகரப்பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது குறித்து, திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Embed widget